Skip to main content

‘ஒருவர் பெயரில் உள்ள பல மின் இணைப்புகளை ஒன்றிணைக்க வேண்டும்’ - உலவும் வதந்தி

Published on 08/03/2023 | Edited on 08/03/2023

 

'One has to merge multiple power lines in one's name' - rumor

 

திருவெறும்பூரில் பணியாற்றும் உதவி பொறியாளர் மின் நுகர்வோர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். அந்த கடிதத்தில், ‘மின் நுகர்வோரான நீங்கள் உங்கள் வளாகத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேற்கண்ட பார்வையின்படி ஒரு வளாகத்திற்கு ஒரு மின் இணைப்பு என்ற அடிப்படையில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை ஒரே மின் இணைப்பாக இணைக்க (மெர்ச்) உத்தரவிடப்பட்டுள்ளது. ஆகவே இக்கடிதம் கிடைக்கப்பெற்ற பதினைந்து தினங்களுக்குள் தங்களது மின் இணைப்புகளை ஒரே மின் இணைப்பாக மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு, உதவி மின்பொறியாளர் இயக்குதலும் காத்தலும் திருவெறும்பூர்’ எனக் கையெழுத்தும் இடப்பட்டுள்ளது. 

 

இக்கடிதம் சமூக வலைத்தளத்தில் உலவி பொதுமக்களை பீதியடைய வைத்திருக்கிறது. இந்த தகவல் அரசின் கவனத்திற்கு சென்றதும் உடனடி நடவடிக்கையாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் குறிப்பிட்ட அந்த உதவி மின்பொறியாளரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ததோடு அப்படிப்பட்ட தகவல்கள் முற்றிலும் தவறானது என அறிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. 

 

அதில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் இதுவரை 99 சதவீதத்திற்கு மேல் வீடு, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியானது வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களில் சமூக வலைதளங்களில் ஒரே வீட்டில் ஒரே நபரின் பெயரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகள் ஒன்றிணைக்கப்படுவதாகவும், அதற்காகவே ஆதார் எண் பெறப்பட்டு மின் இணைப்புடன் இணைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது என்ற கருத்தும் பதியப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது.

 

'One has to merge multiple power lines in one's name' - rumor

 

இந்த கருத்து முற்றிலும் தவறானது, மேலும் உண்மைக்கு புறம்பானதாகும். தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த 9/9/2022 அன்று வெளியிட்ட விபரப்பட்டியல் மாற்ற ஆணையின் சரத்துகளின்படி கள ஆய்வின் அடிப்படையில் ஒரே வீட்டில் அல்லது குடியிருப்பில் ஒரே நபரின் பெயரில் ஒரு குடும்பத்தினரே உபயோகிக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகளை ஒன்றிணைக்க அல்லது அத்தகைய கூடுதல் மின் இணைப்புகளை பொது பயன்பாட்டிற்கான மின் இணைப்பாக மாற்ற உத்தரவு பிறப்பித்தது. இருந்த போதிலும் சில நிர்வாகக் காரணங்களால் மேற்படி ஒன்றிணைப்பு மாற்றும் பணி தொடங்க கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. 

 

எனவே இது தொடர்பான எந்த ஒரு செயல் உத்தரவும் மின் பகிர்மான வட்டங்களில் உள்ள பிரிவு அலுவலகங்களுக்கு பிறப்பிக்கப்படவில்லை. எனினும் குறிப்பிட்ட கள ஆய்வின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பிரிவு அலுவலரின் கடித வரைவு செயல் ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சி ஆகும். இதில் சம்பந்தப்பட்ட அந்த அலுவலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் கவனத்திற்கு’ - அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய அறிவிப்பு

Published on 30/12/2023 | Edited on 30/12/2023
Minister Thangam thennarasu important announcement on Nellai, Thoothukudi electricity tariff extension' -

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் அண்மையில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்தனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மின் நுகர்வோர்கள் மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த கால நீட்டிப்பு செய்வதாக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளைக் கருத்தில் கொண்டு மின் நுகர்வோர்கள் தங்களது மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த கால நீட்டிப்பு அளிக்கப்பட்டது. மேலும், மின் உபயோகிப்பாளர்களின், மின் கட்டணம் செலுத்தும் கடைசி நாள் 18.12.2023 முதல் 30.12.2023 வரை இருந்த நிலையில், அதிகனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு அபராதத் தொகை இல்லாமல் 02.01.2024 அன்று வரை மின் உபயோகிப்பாளர்கள் மின் கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மின்கட்டணத்தை அபராதத்தொகை இல்லாமல் செலுத்த 02.01.2024 வரை வழங்கப்பட்ட கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கனமழையின் காரணமாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள அதீத பாதிப்பினை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள மின்நுகர்வோர்கள் தங்களது மின்கட்டணத்தை அபராதத்தொகை இல்லாமல் செலுத்த கீழ்க்கண்டவாறு கூடுதல் காலநீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள மின் உபயோகிப்பாளர்களின் மின்கட்டணம் செலுத்தும் கடைசி நாள் 18.12.2023 முதல் 02.01.2024 வரை இருந்த நிலையில், அபராதத் தொகை இல்லாமல் 01.02.2024 அன்று வரை மின் உபயோகிப்பாளர்கள் மின்கட்டணம் செலுத்த கூடுதல் காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது. மேலும், இந்த காலநீட்டிப்பு வீடு, வணிக பயன்பாடு, தொழிற் சாலைகள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் மற்றும் பிற மின்நுகர்வோர்கள் அனைவருக்கும் பொருந்தும்’ என்று தெரிவித்துள்ளார். 

Next Story

‘தென் மாவட்ட மக்கள் கவனத்திற்கு’ - மின் வாரியம் முக்கிய அறிவிப்பு

Published on 27/12/2023 | Edited on 28/12/2023
Attention of the people of South District Power Board important announcement

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் அண்மையில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்தனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் கனமழையால் பாதிக்கப்பட்ட 4 மாவட்ட மக்கள், பின்பற்ற வேண்டிய மின் பாதுகாப்பு தொடர்பான வழிமுறைகள் குறித்து மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்த அறிவிப்பில், “கடந்த வாரம் தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கன மழை காரணமாகத் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஏற்பட்ட மின்சார பாதிப்பினை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் போர்க்கால அடிப்படையில், பணிகளைத் துரிதமாக மேற்கொண்டது. இதனால் தற்போது அனைத்துப் பகுதிகளுக்கும் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கனமழை காரணமாக மின் வயர்கள் மற்றும் மின் சாதனங்கள் பழுது ஏற்பட்டிருக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளபடியால் பொதுமக்கள் பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதன்படி வீட்டில் மின் சுவிட்சுகளை 'ஆன்' செய்யும்போது பாதுகாப்புக்காக காலில் செருப்பு அணிந்து கொள்ளவும். நீரில் நனைந்த பேன், லைட் உட்பட எதையும் மின்சாரம் வந்தவுடன் இயக்க வேண்டாம். வீட்டின் உட்புற சுவர் ஈரமாக இருந்தால் மின்சார சுவிட்சுகள் எதையும் இயக்கக் கூடாது.

மின்சார மீட்டர் பொருத்தப்பட்டுள்ள பகுதி ஈரமாக இருந்தால் உபயோகிக்கக் கூடாது. வீட்டில் மின்சாரம் இல்லையென்றால் அருகிலிருந்து தாங்களாகவே வயர் மூலம் மின்சாரம் எடுத்து வரக்கூடாது. மின் கம்பி அறுந்து தொங்கிக் கொண்டிருந்தாலோ, மின் கம்பங்கள் உடைந்திருந்தாலோ, சாய்ந்திருந்தாலோ உடனடியாக மாநில மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தை 94987 94987 என்ற அலைப்பேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும்” எனத் தெரிவித்துள்ளது.