Skip to main content

மத்தியமைச்சர் கட்காரியை போட்டி போட்டு வரவேற்ற திமுக, அதிமுக எம்.பி - எம்.எல்.ஏக்கள்.

Published on 28/09/2019 | Edited on 28/09/2019

வேலூரில் உள்ள தனியார் பல்கலைழக நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள சாலை மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் மத்தியமைச்சர் நிதின்கட்காரி செப்டம்பர் 28ந்தேதி மதியம் வேலூர்க்கு வருகை தந்திருந்தார்.

 

nitin katkari welcomed by dmk and admk


அவரின் வருகையை முன்னிட்டு அவரை வரவேற்க திமுகவை சேர்ந்த வேலூர் நாடாளுமன்ற தொகுதி எம்.பி கதிர்ஆனந்த், ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் காந்தி, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்தியமைச்சர் டி.ஆர்.பாலு எம்.பியின் மகன் ராஜா போன்ற திமுக முக்கியஸ்தர்கள் காத்திருந்தனர்.


அதேபோல், அதிமுகவை சேர்ந்தவரும், மாநிலங்களவை உறுப்பினரான ராணிப்பேட்டை முகமதுஜான் கட்காரியை வரவேற்க காத்திருந்தார். கட்காரி வருகை தந்ததும் திமுக, அதிமுக எம்.எல்.ஏ, எம்.பிக்கள் போட்டி போட்டுக்கொண்டு சால்வை அணிவித்து, பூங்கொத்து தந்தனர். 

வேலூர் எம்.பி கதிர்ஆனந்த் கட்காரியிடம் தன் தொகுதிக்கு தேவையென ஒரு மனுவை தந்தார். அதில், சென்னை டூ பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலை வேலூர் பாராளுமன்ற தொகுதி வழியாக செல்கிறது. இந்த சாலையில் அதிகமான விபத்துக்கள் நடைபெறுகின்றன. மனித உயிர்களை காப்பாற்றும் பொருட்டு விபத்துக்களை தடுக்க ஆம்பூர், வாணியம்பாடி, வேலூர் போன்ற பகுதிகளில் குறிப்பிட்ட இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க வேண்டும்மென கோரிக்கை மனுவை தந்தார்.

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தலைமறைவான எம்.ஆர்.விஜயபாஸ்கர்; 5 தனிப்படைகள் அமைப்பு

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
Absentee MR Vijayabaskar; 5 personnel system

தலைமறைவான முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்து உள்ளனர் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு ஜூன் 21 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது கடுமையான விவாதங்களுக்கு பிறகு மூன்று தரப்பு வாதங்களைக் கேட்ட மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் ஜூன் 25 ஆம் தேதிக்கு மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்திருந்தார்.

இதனையடுத்து நில அபகரிப்பு வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன் ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டிவரும் நிலையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவரைப் பிடிக்க முயன்று வருகின்றனர்.

Next Story

முதல்வரின் கடிதம்; கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறைமுகப்படுத்தி மத்திய அரசு பதில்

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
nn

கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் அண்மையில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவித்து தாயகம் அழைத்தவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மூன்று முறை கடிதம்  எழுதி இருந்தார்.

இந்நிலையில் தமிழக முதல்வரின் கடிதத்திற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில், '1974ம் வருடம் மத்திய அரசு மற்றும் தமிழக அரசு இடையேயான ஒரு ஒப்பந்தத்தின் (கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறைமுகமாக குறிப்பிட்டு) அடிப்படையில் மீனவர் பிரச்சனை ஆரம்பமானது. அன்றிலிருந்து எப்போதெல்லாம் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகிறார்களோ அப்போதெல்லாம் மத்திய அரசின் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இந்திய மீனவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம். மீனவர்களின் நலன் காப்பதில் மத்திய அரசின் வெளியுறவுத்துறை அதிகபட்ச முன்னுரிமை தருகிறது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளாக நடவடிக்கை எடுத்து வருகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது' எனத் தெரிவித்துள்ளார்.