Skip to main content

எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி பெயரைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் உள்பட 2 பேர் கைது!

Published on 14/02/2020 | Edited on 14/02/2020

நாகை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தமிமுன் அன்சாரி பெயரைப் பயன்படுத்தி அவர் நலத்திட்டமாக 31 பேருக்கு ஸ்கூட்டி வழங்க உள்ளதாக அட்டை அச்சடித்து கிராமங்களில் கொடுத்து ரூபாய் 5 ஆயிரம் வரை வசூலில் ஈடுபட்ட தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஒன்றிய அ.தி.மு.க சிறுபான்மைப் பிரிவு ஒன்றியச் செயலாளர் ஆவணம் கனி உள்பட இருவரை பொதுமக்களே பிடித்து புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். 

NAGAI DISTRICT TAMIMUN ANSARI MLA NAME MISS USED POLICE ARRESTED

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் சிவன் மோட்டார்ஸ் என்ற பெயரில் ஹீரோ ஷோரூமுக்கு பேராவூரணி வட்டம் ஆவணம் கிராமத்தில் இருந்து தொடர்பு கொண்ட ஒருவர் மார்ச் 5- ஆம் தேதி நாகை எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி இலவசமாக ஸ்கூட்டி வழங்குகிறாரா? அந்த வண்டிகள் உங்கள் நிறுவனத்தில் இருந்து வழங்கப்படுகிறதா? என்று கேட்டுள்ளார். ஷோரூமில் இருந்து பேசியவர்கள் அப்படி ஏதும் இல்லை என்று சொன்னதுடன் கூடுதல் விளக்கம் கேட்க இருவர் டோக்கன் கொடுத்து பணம் வசூல் செய்கிறார்கள் என்று போனில் தொடர்பு கொண்ட நபர் கூறியுள்ளார்.

NAGAI DISTRICT TAMIMUN ANSARI MLA NAME MISS USED POLICE ARRESTED

அதன் பிறகு மோசடியில் ஈடுபட்டு வந்த நபரை ஷோரூமில் இருந்து தொடர்பு கொண்டு தங்களுக்கு பைக் வேண்டும் என்று கேட்க ரூ. 5 ஆயிரம் பணம் கேட்டுள்ளனர். பணத்துடன் இருப்பதாகக் கூறி அவர்களை கீரமங்கலம் வரவைத்து பிடித்து கீரமங்கலம் போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

NAGAI DISTRICT TAMIMUN ANSARI MLA NAME MISS USED POLICE ARRESTED

இது குறித்து ஷோரூம் நிர்வாகிகள் கூறும் போது, "ஆவணத்தில் இருந்து ஒருவர் தொடர்பு கொண்டு கேட்டதும் மோசடி நடப்பதை அறிந்து சம்மந்தப்பட்டவர்களை பின் தொடர்ந்தோம். எங்களுக்கு வண்டி வேண்டும் என்று பொறி வைத்து பிடித்தோம். அ.தி.மு.க சிறுபான்மைப் பிரிவு ஒன்றியச் செயலாளர் கனியின் பைக்கில் இருந்த பையில் 50- க்கும் மேற்பட்ட டோக்கன்கள், ஒரு நோட்டில் பெயர்கள் எழுதப்பட்டிருந்தது. தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களைச் சோ்ந்த பலரிடம் ஆதார் நகல் வாங்கி வைத்திருந்தனர். விசாரித்த போது விடுதி சந்திரன் என்பவருடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டதாகக் கூறினார்கள். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆவடியில் இரட்டைக் கொலை; போலீசாரிடம் சிக்கிய செல்போன்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
aavadi siddha doctor and his wife incident Cell phone caught by the police

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்துள்ள மிட்டனமல்லியில் சித்த மருத்துவர் சிவன் நாயர் என்பவரும், அவரது மனைவி பிரசன்னகுமாரி ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இத்தகைய சூழலில் அவரது இல்லத்திற்கு சிகிச்சைக்கு வருவதுபோல் நேற்று (28.04.2024) இரவு வீட்டிற்குள் மர்ம நபர்கள் நுழைந்துள்ளனர். அதன்பின்னர் சித்த மருத்துவர் சிவன் நாயரையும் அவரது மனைவி பிரசன்னகுமாரியையும் மர்ம நபர்கள் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாராணை மேற்கொண்டனர். அப்போது இந்த இரட்டைக் கொலை நடந்த இடத்தில் செல்போன் ஒன்று கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மகேஷ் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதோடு கொலையான மருத்துவரிடம் சிகிச்சை பெற வந்தவர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் கொலையாளிகள் பல லட்சம் மதிப்பிலான தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனரா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆவடி அருகே சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவி கழுத்து அறுத்து கொடூரக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தேவகவுடா மகன் மீது பாலியல் குற்றச்சாட்டு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Deve Gowda's son issue in karnataka 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இத்தகைய சூழலில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

Deve Gowda's son issue in karnataka 

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் அவரைக் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Deve Gowda's son issue in karnataka 

இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எச்.டி.ரேவண்ணா வீட்டில் பணியாற்றும் சமையலர் அளித்த புகாரின் பேரில் ரேவண்ணா மீது பாலியல் சீண்டல், மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஹோலேநர்சிபூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எச்.டி. ரேவண்ணாவின் மகன் பிரஜ்வால் மீது ஏற்கெனவே பாலியல் புகார் உள்ள நிலையில் தற்போது தந்தை மீதும் பாலியல் புகார் எழுந்துள்ள சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.