Skip to main content

9 பேருந்துகளின் கண்ணாடி உடைத்த மர்ம நபர்கள்... சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை!

Published on 22/09/2022 | Edited on 22/09/2022

 

Mysterious persons who broke the glass in 9 buses... Police have seized the CCTV footage and are investigating!

 

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள அதிராம்பட்டினம் பகுதியில் நேற்று மதியம் ஒரு நகரப் பேருந்து சென்று கொண்டிருந்த போது எதிரே ஒரு பைக்கில் தலைக்கவசம் அணிந்து வந்த 2 பேர் கல்வீசி பஸ் கண்ணாடியை உடைத்துச் சென்றனர். அதே போல பேராவூரணி டிப்போவிலிருந்து சென்ற 4 பேருந்துகளும் பட்டுக்கோட்டை டிப்போவைச் சேர்ந்த 3 பஸ்கள், புதுக்கோட்டை டெப்போவைச் சேர்ந்த 2 பஸ்கள் என சில மணி நேரத்தில் 2 குழுவாக 2 பைக்குகளில் சென்ற 4 பேர் 9 பஸ்களின் கண்ணாடிகளை உடைத்துள்ளனர். இதில் சில பஸ் ஓட்டுநர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

 

திடீரென சில மணி நேரத்திற்குள் தஞ்சை தெற்கு மாவட்டத்தில் பொதுமக்கள் பதறும் விதமாக பஸ் கண்ணாடிகள் உடைத்த சம்பவம் போலிசாரை திணறடித்ததோடு பொதுமக்களை அச்சப்பட வைத்துள்ளது.

 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி தேடி வருகின்றனர். பைக் முன்னாள் பெட்ரோல் டேங்கில் சாக்கு மூட்டையில் கற்களை அள்ளிக் கொண்டு இருவர் வேகமாக செல்லும் காட்சிகளை போலீசார் கைப்பற்றி வாகன எண்களையும் எடுத்துள்ளனர். அதிராம்பட்டினம் பகுதியிலிருந்தே தாக்குதல்கள் தொடங்கி இருப்பதால் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை போலீசார் சேகரித்து வருகின்றனர். மேலும் தஞ்சை மாவட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் வாகன சோதனைகளையும் முடுக்கிவிட்டுள்ள நிலையில் புதுக்கோட்டை - தஞ்சை மாவட்ட எல்லையில் கைகாட்டியில் வடகாடு போலீசார் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையில் சோதனை சாவடி அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சிசிடிவி பதிவுகள் உள்ளதால் இரு வாகனங்களிலும் கற்களோடு சென்று பஸ்களை உடைத்த மர்ம நபர்களை பிடித்து விடலாம் என்கின்றனர் போலீசார். ஒரே நேரத்தில் இரு கும்பல் 9 பேருந்துகளை உடைத்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டிய கணவன்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
husband cut the hand of his wife who was talking on video call

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சேகர் (41 ) நெசவுத் தொழிலாளி இவரது மனைவி ரேவதி (வயது 35) இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் மூன்றாவது மகள் பள்ளியில் படித்து வருகிறார் .

இந்த நிலையில் ரேவதி கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பார்ப்பது, போட்டோ போடுவது, ஆன் லைன் நண்பர்களுடன் பேசுவது என அதிக அளவு நேரம் செலவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு  குடும்பத்தில் சண்டை நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு ரேவதி வீடியோ காலில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். வீட்டுக்கு வந்த சேகரை கவனிக்காமல் மனைவி பேசிக்கொண்டே இருந்ததால் ஆத்திரம் அடைந்த சேகர் ரேவதியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில்  ஆத்திரமடைந்த சேகர் வீட்டிலிருந்த அருவாமனையை எடுத்தவர், இந்த கை தானே போன் எடுத்து பேசிக்கிட்டே இருக்குது, ரீல்ஸ் பார்க்கச்சொல்லுது, பேசச்சொல்லுது என ரேவதியின் வலது கையை வெட்டியுள்ளார்.

கையில் வெட்டுப்பட்டதால் அலறிய ரேவதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வெட்டப்பட்ட கை பலத்த சேதம் அடைந்த நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேகரை அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், குடும்பத்தை கவனிக்காமல் எப்போது பார்த்தாலும் போன் வைத்துக் கொண்டு யாருடனாவது பேசிக்கொண்டே இருக்கிறார். அல்லது ஏதாவது பார்த்துக் கொண்டே இருக்கிறாள். இதைக்கேட்டதற்கு என்னை எடுத்தெறிந்து பேசினாள். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு வர ஆரம்பித்தது அந்த கோபத்தில் தான் வெட்டினேன் எனக் கூறியுள்ளார்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.