Published on 10/11/2018 | Edited on 10/11/2018

மதுரையில் பட்டப்பகலில் 19 வயது இளைஞர் எரித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேரை கைது செய்துள்ளனர் காவல்துறையினர்.
நேற்று முன் தினம் மதுரை - சிவகங்கை சாலையில் நடுரோட்டில் வைத்து அரவிந்த் என்ற இளைஞன் கொல்லப்பட்டார். இதற்கு காரணமென்னவென்றால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பனங்காடு பகுதியை சேர்ந்த கருப்பு என்பவரை அரவிந்தனின் அண்ணன் வசந்த் வெட்டி கொன்றார். கருப்பு கொலைக்கு காரணமானவர்களை பழிக்குப்பழி வாங்க எண்ணிய அவரது மாமா மணிகண்டன் கூட்டாளிகளுடன் சேர்ந்து அரவிந்தனை கொலை செய்தார். மணிகண்டன், சரத்குமார், சரவணன், கார்த்திக், பிரவீன்குமார், பூபதி உட்பட 8 பேரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவான 4 பேர்களையும் தேடி வருகின்றனர்.