Published on 29/03/2020 | Edited on 29/03/2020
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், தங்களது ஒரு மாத ஊதியத்தை அரசு வழக்கறிஞர்கள் வழங்க வேண்டும் என, தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதில், இந்நிவாரண உதவித் தொகையை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்கிட அறிவுறுத்தியிருக்கும் அவர், நிவாரண உதவிகளுக்கு 100 சதவீத வரிச்சலுகை வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.