Skip to main content

ரேஷன் அரிசியைப் பாலீஷ் செய்து பணம் பார்க்கும் நவீன டெக்னிக்... தப்பிய கும்பல்... சிக்கிய 8 டன் பாலீஷ் அரிசி!

Published on 06/11/2020 | Edited on 06/11/2020

 

The modern technique of polishing ration rice and looking for money ... escaped gang .. trapped 8 tons of polished rice !!

 

அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களுக்கு தமிழக ரேசன் அரிசி மூட்டைகள் கடத்தப்படுவது வாடிக்கையான ஒரு நிகழ்வு தான். ஆனால் அதனையே பாலீஷ் செய்து மாடர்ன் ரைஸ் என்ற கெத்தோடு அதிகாரிகளின் சோதனையிலும் தப்பிக்கிற சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

தென்காசி மாவட்டத்தின் புளியங்குடிப் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாகத் கிடைத்த தகவலால் அந்த காவல் நிலைய எஸ்.ஐ.யோபு சம்பத்ராஜன் தலைமையிலான போலீஸார் தென்பகுதி ஓரத்திலுள்ள கோவிந்தப்பேரி கண்மாயை ரவுண்டப் செய்ததில், அங்கே 50 கிலோ வீதம் சுமார் 150க்கு மேற்பட்ட சாக்குப் பைகளில் அடைக்கப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கிவைத்திருந்ததைக் கைப்பற்றினர். இவர்கள் வருவதையறிந்த கடத்தல் கும்பல் தப்பியோடினர். போலீசார் விசாரணையில் அது பாலீஷ் செய்யப்பட்ட ரேஷன் அரிசி என்றும் கடத்துவதற்கு வசதியாக 50 கிலோ பையில் பேக் செய்யப்பட்டதும் தெரிய வந்திருக்கிறது.

 

The modern technique of polishing ration rice and looking for money ... escaped gang .. trapped 8 tons of polished rice !!


பொதுவாக ரேஷன் அரிசியைக் கடத்தினால் அதன் நிறமே காட்டிக் கொடுத்துவிடும். விலையும் குறைவு அதனால் எளிதில் மாட்டிக்கொள்வார்கள். ஆனால், அதனையே மார்க்கெட்டில் விற்கப்படுகிற அரிசியைப் போன்று அனுப்பினால் தப்பிவிடலாம் என்ற லாப நோக்கில் புதிய டெக்னிக்காக, ரேஷன் அரிசியை நெல் அறவைமில்களின் தனி மெஷின் மூலம் பாலீஷ் செய்வதால் அரிசியின் எடையும் குறைவதுடன் வழக்கமாகச் சந்தையில் கிடக்கும் அரிசியைப் போன்று பளீர் வெள்ளை நிறமாகவும் மாறிவிடும்.

 

cnc

 

அதே சமயம், வெளிச் சந்தைகளில் விற்கப்படுகிற அரிசியின் விலையொட்டியே கிடைப்பதால் கணிசமான லாபமும் கிடைக்கும். இந்தக் கணக்கில் சல்லீசான விலையில் வாங்கப்படுகிற ரேஷன் அரிசியைப் பாலீஷ் செய்து மார்க்கெட் ரேட்டிற்குச் சற்று குறைந்த விலையான, கிலோ 25 ரூபாய்க்கு நவீன தயாரிப்பு பைகளில் 50 கிலோ வீதம் பேக் செய்து வாடிக்கையான தனியார் கம்பெனி ரகம் என்று கேரளாவுக்குக் கடத்தி விடுவதால் கொளுத்த லாபம் கிடைப்பதோடு பிடிபடாமல் தப்பியும் விடுகின்றனர். ஆனால் கடுமையான சோதனை இதனைக் காட்டிக் கொடுத்து விடும் அந்த அளவுக்கு அதிகாரிகள் மேற்கொள்ளாதது தான் வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

இதையடுத்துப் பிடிபட்ட பாலீஷ் ரேஷன் அரிசி மூட்டைகளைக் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு எஸ்.ஐ காசிப்பாடிண்யன் மூலம் நெல்லையிலுள்ள குடோனுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இது குறித்து புளியங்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பியவர்களைத் தேடி வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேவகவுடா மகன் மீது பாலியல் குற்றச்சாட்டு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Deve Gowda's son issue in karnataka 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இத்தகைய சூழலில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

Deve Gowda's son issue in karnataka 

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் அவரைக் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Deve Gowda's son issue in karnataka 

இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எச்.டி.ரேவண்ணா வீட்டில் பணியாற்றும் சமையலர் அளித்த புகாரின் பேரில் ரேவண்ணா மீது பாலியல் சீண்டல், மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஹோலேநர்சிபூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எச்.டி. ரேவண்ணாவின் மகன் பிரஜ்வால் மீது ஏற்கெனவே பாலியல் புகார் உள்ள நிலையில் தற்போது தந்தை மீதும் பாலியல் புகார் எழுந்துள்ள சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.