Skip to main content

ஆட்சியர் அலுவலகத்திற்கு திடீர் விசிட் அடித்த அமைச்சர் கீதா ஜீவன்! 

Published on 04/08/2022 | Edited on 04/08/2022

 

Minister Geethajeevan paid a surprise visit to the collector's office!

 

தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர் அருகே காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில், பெண் தொழில் முனைவோருக்கான உற்பத்தி மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத் தலைவர் பச்சைமால் வரவேற்று பேசினார்.

 

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, அந்த மையக் கட்டடத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கீதாஜீவன், “ சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்துவருகிறது. குறிப்பாக வாழையில் இருந்து மாவு தயாரிக்கும் பயிற்சி அளித்து அதை சந்தைப்படுத்துவது சிறப்பான செயல். எங்கள் தூத்துக்குடி மாவட்டத்திலும் இந்த தொழில்நுட்பத்தை செயல்படுத்த ஆர்வமாக உள்ளேன். 

 

தமிழகத்தில் 9 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியப்பட்டது. அவர்களுக்கான ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்படுவதோடு, பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அத்துடன் 45 குழந்தைகளுக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 6ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகள் கல்லூரி படிப்பை தொடரும் போது மாதம் ரூ.1,000 உதவித்தொகை விரைவில் வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே கல்லூரி படிப்பில் இருந்து தற்போது 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு படித்து வரும் மாணவிகளுக்கும் இந்த உதவித் தொகை வழங்கப்படும்” என்று கூறினார்.

 

முன்னதாக சென்டெக்ட் வேளாண் அறிவியல் மைய வளாகத்தில் அரசு துறைகள் மற்றும் பெண் தொழில் முனைவோரின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சியை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்து பார்வையிட்டார். விழாவில் மாவட்ட கலெக்டர் முரளிதரன், கம்பம் எம்.எல்.ஏ.  ராமகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். அதைத்தொடர்ந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தின் செயல்பாடுகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர் கீதாஜீவன் திடீரென ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று, சமூக நலத்துறை, மகளிர் திட்டம் உள்ளிட்ட அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அரசு துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். திடீரென அமைச்சர் ஆட்சியர் அலுவலகத்திற்கு விசிட் அடித்து ஆய்வு கூட்டம் நடத்தியது அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேனி மக்களவை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து சீல்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இந்திய மக்களவைத் தேர்தல் முதல் கட்ட தேர்தலாக தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணியில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேனி மக்களவையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1788 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் சேகரிக்கப்பட்டு தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த (ஸ்டாங் ரூம்) பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

தேனி மக்களவையில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம், போடிநாயக்கனூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 69.87% வாக்குகள் பதிவாகியுள்ளது. நேற்று மாலை தேர்தல் முடிவ டைந்த நிலையில் வாக்குப்பதிவு மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேகரிக்கும் பணி இரவு முழுவதும் நடைபெ ற்றது.

Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இதனைத் தொடர்ந்து கொடுவார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்டாங் ரூமில் அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் சீல் வைக்கும் பணி நடைபெற்றது. ஸ்ட்ராங் ரூமில் அனைத்து பகுதிகளும் முழுமையாக மூடப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையின் நான்கு அடுக்கு பாதுகாப்பில்  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணிக்கை ஜூன் 04  நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 45 நாட்கள் உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.