Skip to main content

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இயக்குனர் சேரன் கலந்து கொண்டதன் உண்மையான காரணம்... வெளிவந்த தகவல்!

Published on 30/11/2019 | Edited on 30/11/2019

தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இரண்டு சீசன்களைப் போல் மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மூன்றாவது சீசனில் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமான நபர்களில் முக்கியமான நபர் இயக்குனர் சேரன். இயக்குனர் சேரன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது ஒரு சில இயக்குனர்கள் சேரன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறித்து கருத்து தெரிவித்து வந்தனர். மேலும் புகழ் பெற்ற இயக்குனர், தேசிய விருது, தமிழக அரசு விருது வாங்கிய இயக்குனர் சேரன் ஏன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்று பல்வேறு கேள்விகளும் எழுந்தது. 
 

director

 


இந்த நிலையில் ஃபேஷன் டிசைனர் ஃபைசாகானின் காலண்டருக்காக எடுக்கப்பட்ட போட்டோஷூட்டில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சாக்சி அகர்வால் மாடலாக நடித்துள்ளார். அந்த காலண்டருக்காக எடுக்கப்பட்ட ஃபோட்டோக்களையும், ஃபோட்டோஷூட் வீடியோக்களையும் சாக்‌ஷி தனது இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த காலண்டருக்காக எடுக்கப்பட்ட புகை படங்கள் சமூகவலைதளங்களில்  வைரலாகப் பேசப்பட்டது.  இந்நிலையில் சாக்சி இடம்பெற்ற காலண்டர் பக்கத்தைஇயக்குனர் சேரன் வெளியிட்டார். புகைப்படத்தை வெளியிட்டபின் செய்தியாளர்களை சந்தித்த சேரன் தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ளவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதாகக் கூறினார். மேலும் திரையில் வெற்றிகரமாக ஓடிய பிரேமம் மற்றும் 96 படங்கள் ஆட்டோகிராஃப் படம் மாதிரி இல்லை என்றும் கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘டிஜிட்டல் இந்தியா’ - அதிர்ச்சி அனுபவத்தைப் பகிர்ந்த நடிகை

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
hina khan beggar incident

பாலிவுட்டில் தொலைக்காட்சி தொடர்களிலும், நிகழ்ச்சிகளிலும் மற்றும் ஆல்பம் வீடியோக்களிலும் நடித்து வருகிறவர் நடிகை ஹினா கான். மேலும் டேமேஜ்டு 2 வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் யாசகர் ஒருவரின் செயல் குறித்து பதிவிட்டிருந்தார். அது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அந்தப் பதிவில், “நான் சிக்னலில் கிரீன் சிக்னலுக்காக காத்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு நபர் என் கார் கதவை தட்டினார். கொஞ்சம் பணம் கொடுத்து உதவ முடியுமா என்று கேட்டார். என்னிடம் பணம் இல்லை என்றேன். வீட்டில் தம்பி, தங்கைகள் இருக்கிறார்கள். தயவு செய்து ஏதாவது உதவுங்கள் என்றார். நான் மீண்டும் என்னிடம் பணம் இல்லை. ஸாரி என்றேன். கூகுள் பே இருக்கு மேடம். அந்த நம்பர் தருகிறேன் என்றார். அது எனக்கு அதிர்ச்சியளித்தது. 

பின்பு அவருக்கு கூகுள் பே மூலம் பணம் அனுப்ப முயற்சிக்கும் போது, ஒரு வாரத்துக்கான ரேஷன் பொருட்கள் வாங்க பணம் அனுப்புங்க மேடம் என்றார். இது என்னை மேலும் அதிர்ச்சியாக்கியது. டிஜிட்டல் இந்தியா தற்போது சிறந்ததாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

குழந்தை விவகாரம் - நடிகை கைது!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
sonu srinivas.gowda child issue

பெங்களூரைச் சேர்ந்தவர் கன்னட நடிகை சோனு ஸ்ரீநிவாஸ் கௌடா. கன்னட பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டதன் மூலமும் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டும் பிரபலமானவராக இருந்து வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ரீல்ஸ் வீடியோ வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் அவர், அவ்வப்போது ஒரு பெண் குழந்தையுடன் இருக்கும்படியும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வந்தார். அந்த குழந்தையை அவர் தத்தெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் அக்குழந்தையை சட்ட விரோதமாக சோனு ஸ்ரீனிவாஸ் கௌடா தத்தெடுத்துள்ளதாக குழந்தைகள் நலத்துறை சார்பில் காவல் துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்குழந்தையின் அடையாளத்தை நடிகை வெளிப்படுத்தியதாகவும், மார்ச் மாதம் தேர்வு இருந்தும் குழந்தையை பள்ளிக்கு அனுப்பாமல் இருந்ததாகவும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு குழந்தை தத்தெடுக்கும் நடைமுறையில், குழந்தைக்கும் தத்தெடுப்பவருக்கும் 25 வயது இடைவெளி இருக்க வேண்டும் என சட்டம் இருக்கும் நிலையில் அக்குழத்தைக்கு 8 வயது என்றும் நடிகைக்கு 29 என்றும் மனுவில் மேற்கோள்காட்டப்பட்டுள்ளது.  

இந்த புகாரின் அடிப்படையில் நடிகையை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவரை விசாரித்த போது, குழந்தை தத்தெடுக்கும் முறையை முழுமையாக பின்பற்றவில்லை என்று ஒப்புகொண்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. பின்பு நடிகையை 4 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது.