Skip to main content

காதலனை கடத்தி தாக்கிய இளம்பெண்! இவ்வளவு கோபம் வர காரணம் என்ன?

Published on 12/05/2019 | Edited on 12/05/2019

 

சென்னையைச் சேர்ந்தவர் கசிம் முகமது. இவருடைய மகன் 21 வயதுடைய நவீத் அகமது பி.காம் இறுதி ஆண்டு முடித்துள்ளார். நவீத் அகமதுவை ஒரு கும்பல் திடீரென கடத்திக்கொண்டு போய், அவரது விலை உயர்ந்த செல்போனை பிடிக்கொண்டு தாக்கிவிட்டு சென்றுள்ளது. மறுநாள் காலையில் மயக்கம் தெளிந்த நவீத் அகமது, அங்கிருந்த ஒருவரின் உதவியோடு செல்போனில் தனது தந்தைக்கு தான் இருக்கும் இடத்தை தெரிவித்துள்ளார். 

 

selfie



இந்த சம்பவம் குறித்து டி.பி.சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரை ஒரு இளம்பெண் கடத்தியது தெரிய வந்தது. 
 

நவீத் அகமதுவுக்கு செங்கல்பட்டை சேர்ந்த தொழில் அதிபரின் 20 வயது மகளுடன் நட்பு ஏற்பட்டு இருவரும் நாளடைவில் காதலித்து வந்துள்ளனர். அந்த தொழில் அதிபர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்துடன் அமெரிக்கா சென்றுள்ளார். 

 

இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி அந்த பெண் அமெரிக்காவில் இருந்து சென்னை வந்தார். சென்னை சேத்துப்பட்டில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கிய அந்த இளம்பெண், நவீத் அகமதுவை அடிக்கடி சந்தித்துள்ளார். அடிக்கடி இருவரும் சந்தித்துப் பேசும்போது, நெருக்கமாக ‘செல்பி’ எடுத்துக்கொண்டதாக தெரிகிறது.
 

இந்த நிலையில் சம்பவத்தன்று நவீத் அகமதுவும், இளம்பெண்ணும் ஒரு பூங்காவில் சந்தித்தனர். அப்போது இருவரும் நெருக்கமாக எடுத்த ‘செல்பி’ படத்தை அழிக்கும்படி அப்பெண் கேட்டுக்கொண்டார். ஆனால் நவீத் அகமது மறுத்துவிட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் தனித்தனியாக சென்றுவிட்டனர்.
 

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண், தன்னுடைய நண்பர்களை தொடர்பு கொண்டு நடந்தவைகளை கூறினார். மேலும் அவர் செல்போனில் இருக்கும் நெருக்கமான ‘செல்பி’ படத்தை அழிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

 

இதையடுத்துதான் நவீத் அகமது இருசக்கர வாகனத்தில் கடத்தப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட நவீத் அகமதுவை தாக்கியுள்ளனர். இதில் அவர் மயக்கமடைந்ததும், அவரிடம் இருந்த செல்வோனை எடுத்துச் சென்றுள்ளனர். கண்காணிப்பு கேமரா காட்சியில் இருசக்கர வாகனம் எண் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி இரண்டு நபர்களை போலுசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஒரு வாலிபர் தலைமறைவாகியுள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். 
 

கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களிடம் விசாரணை நடத்தியல் மேற்கண்ட விவரங்கள் போலீசாருக்கு தெரிய வந்தது. அமெரிக்காவில் இருந்து வந்த அந்த இளம்பெண்ணிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

செல்பி எடுக்க முயன்று விபரீதம்; சிங்கம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
Tragedy trying to take a selfie; One killed after being attacked by a lion

அண்மையில் திருப்பதியில் காட்டு வழியாகச் சென்று சிறுமி புலி தாக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது திருப்பதியில் சிங்கத்துடன் செல்பி எடுக்க முயன்ற பார்வையாளர் ஒருவர் சிங்கம் தாக்கி உயிரிழந்திருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் சுந்தரி, குமார் தெங்கள்பூர் உள்ளிட்ட இரண்டு ஆண் சிங்கங்களும், ஒரு பெண் சிங்கமும் உள்ளது. பார்வையாளர்களுக்காக ஒவ்வொரு நாளும் சிங்கங்கள் பாதுகாப்பு கூண்டில் இருந்து காலை எட்டு மணி முதல் மாலை ஐந்து முப்பது வரை திறந்து விடப்படுவது வழக்கம்.

இந்நிலையில் சிங்கங்கள் அடைக்கப்பட்டிருந்த கூண்டில் இருந்து வளாகத்திற்குள் இன்று திறந்துவிடப்பட்டது. அப்போது ஒருவர் செல்பி எடுப்பதற்காக முயன்றபோது சிங்கம் நடமாடும் வளாகத்திற்குள் தவறி விழுந்தார். அவரது ஆடைகளைக் கடித்துக் குதறிய சிங்கம் அவரது கழுத்தையும் கடித்துக் குதறியது. இதைப் பார்த்த வெளியே இருந்த மற்ற பார்வையாளர்கள் அலறியடித்து ஓடினர். அதன் பிறகு மரத்தில் ஏறித் தப்ப முயன்றபோதும்  விடாத சிங்கம் அவரைத் தாக்கிக் கொன்றது.

இந்த சம்பவம் குறித்து பூங்கா நிர்வாகிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சிங்கத்தை கட்டுப்பாட்டில் கொண்டு வந்த ஊழியர்கள் அதனைக் கூண்டில் அடைத்தனர். அந்த நபரின் உடல் கைப்பற்றப்பட்டது. சிங்கத்தின் தாக்குதலால் உயிரிழந்த நபர் ராஜஸ்தானை சேர்ந்தவர் என்பதும், அவரின் பெயர் குருஜாலா பிரகலாதா என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

 இஸ்ரேல் போர்; இளம்பெண்ணின் தலையை துண்டித்து ஊர்வலமாக எடுத்துச் சென்ற கொடூரம்

Published on 31/10/2023 | Edited on 31/10/2023

 

The young lady lost her life for israel incident

 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 3 வாரத்திற்கு மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவிற்கு நீர், மின்சாரம் உள்ளிட்டவற்றை இஸ்ரேல் நிறுத்தி வைத்துள்ளது. கடந்த 7ஆம் தேதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினர், காசாவில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சி விழாவில் பங்கேற்ற பலரை சுட்டுக் கொன்றனர். அதில் சிலரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். 

 

இதனிடையே காசாவை சுற்றி வளைத்துள்ள இஸ்ரேல் அங்கு மின்சாரம், உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றைத் துண்டித்துள்ளது. ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்திருக்கும் இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்கும் வரை காசாவிற்கு மின்சாரம் கிடையாது என இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளாக பிடித்து சென்ற ஒரு இளம்பெண்ணை சித்ரவதை செய்து அவரது தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர்.

 

இசை நிகழ்ச்சி விழாவில் பங்கேற்ற இளம்பெண் ஷானி லோக். இவர் டாட்டூ கலைஞராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், பிணைக்கைதியாக கொண்டு செல்லப்பட்ட ஷானி லோக்கின் தலையில்லாத உடலை காசா நகரில் ஹமாஸ் அமைப்பினர் ஊர்வலமாக எடுத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி உலகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வீடியோவில், அவரது உடலை ஒரு லாரியில் வைத்து சுற்றிலும் ஆயுதம் ஏந்தியவர்கள் முழக்கமிட்டபடி கொண்டு செல்கின்றனர். இது பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. டாட்டூ கலைஞர் ஷானி லோக் கொல்லப்பட்டதை இஸ்ரேல் ஜனாதிபதி இசோக் ஹெர்சோக் உறுதிப்படுத்தியுள்ளார். அவரது தலை கண்டிபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.