Skip to main content

திருச்சி மாநகரில் விறுவிறுப்பாக நடைபெற்ற வேட்புமனு தாக்கல்

Published on 05/02/2022 | Edited on 05/02/2022

 

Local elections: Nomination filed in Trichy

 

திருச்சி மாநகராட்சியில் நேற்று முன்தினம் வரை 334 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் நேற்று கடைசி நாளில் 384 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருக்கின்றனர். இதனால் திருச்சி மாநகராட்சியில் வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மொத்தம் 718 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். 5 நகராட்சிகளில் போட்டியிட நேற்று முன்தினம் வரை 403 பேர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் கடைசி நாளான நேற்று 273 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

 

இதனால் நகராட்சிகளில் போட்டியிட மொத்தம் 676 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். 14 பேரூராட்சிகளில் போட்டியிட நேற்று முன்தினம் வரை 521 பேர் வேட்பு மனு செய்திருந்த நிலையில், கடைசி நாளான நேற்று 369 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் பேரூராட்சிகளில் போட்டியிட மொத்தம் 890பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மாநகராட்சி மற்றும் மாவட்டம் முழுவதும் கடைசி நாளான நேற்று மொத்தமாக 1026 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் திருச்சி மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மொத்தம் 2284 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்