Skip to main content

தப்பி ஓடிய ஆயுள் தண்டனை கைதி - தனிப்படை அமைத்து தேடும் காவல்துறை

Published on 14/03/2022 | Edited on 14/03/2022

 

Life sentence for a fugitive prisoner! Police looking for personal set up!

 

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா குப்பிநாயக்கன்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முருகவேல் என்கிற ராஜா(45). இவர், கொலை மற்றும் திருட்டு வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்று, கடந்த 2015ஆம் ஆண்டில் இருந்து கடலூர் மத்தியச் சிறையில் தண்டனைக் கைதியாக இருந்து வருகிறார். 

 

இந்நிலையில், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் இவர் மீது உள்ள மூன்று வழக்குகள் சம்பந்தமாக விசாரிக்க அரவக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று முன் தினம் ஆஜர்படுத்தி விசாரணைக்கு அழைத்து சென்றனர். அதன்பிறகு விசாரணை முடிந்து, மீண்டும் அவரை கடலூர் மத்திய சிறையில் அடைக்க பேருந்தில் அழைத்துச்சென்றுள்ளனர். 

 

ஆயுள் தண்டனை கைதி ராஜாவுடன், ஆயுதப்படை காவலர்கள், நேதாஜி, உதயகுமார், ஆம்ஸ்ட்ராங் ஆகியோர் பயணித்துள்ளனர். சேலம் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலை வழியாக அவர்கள் வந்த பேருந்து கள்ளக்குறிச்சி அருகிலுள்ள மாடூர் பாளையம் டோல்கேட் அருகில் வந்தபோது அதிகாலை 2 மணி அளவில் கைதி ராஜா பேருந்திலிருந்து குதித்து தப்பி ஓடியுள்ளார். 

 

ராஜாவை அழைத்து வந்த ஆயுதப்படை காவலர்கள் நேதாஜி, உதயகுமார், ஆம்ஸ்ட்ராங் ஆகியோர் இது குறித்து தியாகதுருகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து காவல் ஆய்வாளர் ராமதாஸ் தலைமையிலான போலீசார், டோல் கேட் அருகில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து தண்டனை கைதி தப்பியோடியது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் தப்பி ஓடிய ஆயுள் தண்டனை கைதி ராஜாவை பிடிப்பதற்காக ஒரு தனிப்படை அமைத்துள்ளார். தனிப்படை போலீசார், திண்டுக்கல் உட்பட ராஜா எங்கெல்லாம் ஏற்கனவே தங்கியிருந்தார். அடிக்கடி எங்கு செல்வார் என்பது குறித்த விசாரணை அடிப்படையில் ராஜாவை அப்பகுதிகளில் தீவிரமாக தேடிவருகின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.