Skip to main content

ஐ.டி. ஊழியர் லாவண்யாவை நேரில் சந்தித்து கே. பாலகிருஷ்ணன் நலம் விசாரிப்பு

Published on 02/03/2018 | Edited on 02/03/2018


 

lavanya


சென்னையில் கடந்த 13ந் தேதி கொள்ளையர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வீடு திரும்பிய ஆந்திர மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் லாவண்யா அவர்களை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இன்று (01.03.2018) அவரது வீட்டிற்கு நேரில் சென்று உடல்நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். உடன் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் வி. மகாலெட்சுமி, மாநிலக்குழு உறுப்பினர் ஜி. மஞ்சுளா ஆகியோர் சென்றனர்.

சார்ந்த செய்திகள்