Skip to main content

பள்ளி மாணவர்களை உற்சாகப்படுத்திய காவல்துறையினர்!

Published on 18/10/2019 | Edited on 18/10/2019

ஓஎன்ஜிசி விவகாரத்தால் தமிழகம் முழுவதும் பேசப்பட்டு வந்த கதிராமங்கலம் பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பிறந்தநாள் விழாவையொட்டி, அங்குள்ள பள்ளியிலும், கடைவீதியிலும், பொதுமக்கள் கூடும் இடங்களிலும், டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசத்தின் அவசியம்,என பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி மக்களின் பார்வையை இழுத்திருக்கிறார்கள் பந்தநல்லூர் காவல்துறையினர்.
 

தஞ்சை மாவட்டத்தின் கடைகோடி காவல் நிலையம் பந்தநல்லூர். அந்தக் காவல் நிலையத்திற்குட்பட்ட கிராமமே கதிராமங்கலம். இரண்டு வருடங்களாக ஓ.என்.ஜி.சி குழாய் பதிப்பினால் வழக்கு, கைது, போராட்டம் என பல்வேறு பிரச்சனைகளை சந்தித்த அப்பகுதி மக்களுக்கும் காவல்துறைக்கும் ஒருவித கருத்து முரண்பாடு இருந்தது.

KATHIRAMANGALAM VILLAGE SCHOOLS FORMER PRESIDENT ABDUL KALAM BIRTHDAY CELEBRATION

இந்தநிலையில் சமீபத்தில் தமிழகத்தை உலுக்கி வரும் டெங்குகாய்ச்சல் குறித்தான விழிப்புணர்வு பிரச்சாரத்தையும், பல இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கும் பணிகளையும் பந்தநல்லூர் காவல்துறை ஆய்வாளர் சுகுணா உள்ளிட்ட காவலர்கள் செய்து வருகின்றனர். அந்த வகையில் தஞ்சை மாவட்டத்தின் கடைகோடி கிராமமான மொழையூர் அரசு பள்ளியிலும், பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளிலும் பிரச்சாரம் செய்தனர். அதனை தொடரந்து கதிராமங்கலம் கடைவீதியில் தலைக்கவசம் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்கள், அங்குள்ள அரசு பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அப்துல்கலாம் பிறந்தநாள் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல், தலைக்கவசத்தின் அவசியம், போஸ்கோ சட்டம் உள்ளிட்டவற்றை பற்றி விளக்கி பேசினர்.
 

KATHIRAMANGALAM VILLAGE SCHOOLS FORMER PRESIDENT ABDUL KALAM BIRTHDAY CELEBRATION



விழாவில் பேசிய இன்ஸ்பெக்டர் சுகுணாவோ, "ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த நமது அய்யா மறைந்த அப்துல்கலாமை போல சாதனையாளர்களாக வர வேண்டும், கனவு காணுங்க, நீங்கள் ஒவ்வொரு வரும் ஒரு அப்துல்கலாம் தான்" என்று பேசியவர் டெங்கு காய்சலை ஒழிக்க அரசு நினைத்தால் மட்டும் ஒழித்து விட முடியாது, மாணவர்களாகிய நீங்களும், பெற்றோர்களும், பொதுமக்களும் நினைத்து சுகாதாரத்தை பேனிக்காக்கவேண்டும். தலைக்கவசம் நமது உயிருக்கான கவசம். அதோடு வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஒருமரம் கட்டாயம் வளர்க்க வேண்டும். மரம்தான் இயற்கையை சமநிலையில் வைத்திருக்கும்" என்று பேசிமுடித்தார். அதன் பிறகு அந்த பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகளோடு மரக்கன்றுகளை நட்டதோடு, அனைவருக்கும் மரக்கன்றுகளையும் வழங்கி மகிழ்வித்தனர்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.