Skip to main content

வில்சன் கொலை வழக்கில் தொடர்புடைய இருவர் குமரி போலீஸிடம் ஒப்படைப்பு...!

Published on 15/01/2020 | Edited on 17/01/2020

களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ வில்சனை அப்துல்சமீம் மற்றும் தவ்பீக் இருவரும் கடந்த 8- ஆம் தேதி  துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு கேரளாவில் தலைமறைவானார்கள். இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு இரு மாநில போலீசாரும் தீவிரமாக தேடி வந்த நிலையில் அவர்கள் இருவரும் கடந்த 11ஆம் தேதி கர்நாடகா மாநிலம் உடுப்பியில்  கைது செய்யப்பட்டனர்.

 

kanyakumari-district-ssi-willson-issue

 



கர்நாடக காவல்துறை அவர்களிடம் நடத்திய விசாரணையில்  உடுப்பியில் இருந்து மங்களூரு சென்று அங்கிருந்து நேபாளம் செல்ல இருவரும் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. இந்நிலையில் அவர்கள் இருவரையும் கர்நாடக போலீஸ், குமரி மாவட்ட போலீஸிடம் ஒப்படைத்தது. 

சார்ந்த செய்திகள்