Skip to main content

ஐந்து பெண்களை ஏமாற்றி மோசடி செய்த கல்யாணராமன் -நான்காவது மனைவி புகார்!

Published on 01/08/2022 | Edited on 01/08/2022

 

 Kalyanaraman cheated five women - fourth wife complains!

 

கடலூர் மாவட்டம் மேலகுப்பம் பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்பவர் புதுச்சேரி அனைத்து  மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதில் 'புதுச்சேரி, அரியாங்குப்பத்தைச் சேர்ந்த சீனு என்கிற தெய்வநாயகம் (42), அவருடைய தாயார் வசந்தா ஆகிய இருவரும் காயத்ரி வீட்டிற்கு பெண் கேட்டுவந்தனர். அப்பொழுது  உறவினர்கள் மற்றும் ஊர் பெரியவர்கள் பெண் கொடுக்க சம்மதித்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த 27.07.2020 அன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது 21.08.2020 அன்று புதுச்சேரி பிருந்தாவனத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் இரு வீட்டார் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.  அப்பொழுது கரோனா ஊரடங்கு என்பதால் மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி வைக்க முடியவில்லை. 

 

அவரை திருமணம் செய்து கொள்வதற்காக வரதட்சணையாக 6 பவுன் தங்க நகை, இரு சக்கர வாகனம் மற்றும் பீரோ கட்டில் வழங்கப்பட்டது. மூன்று மாதங்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்த நிலையில் காயத்ரியிடம் அதிகப் பணம், அதிக நகை கேட்டு தினந்தோறும் தகராறு செய்து அடித்துத் துன்புறுத்தி வந்தார். இதுகுறித்து காயத்ரி தன் தாயிடம் தகவல் தெரிவித்தார். உடனடியாக தாய் காயத்ரியின் மாமியார் வீட்டிற்கு வந்து அவர்களிடம்  பேசி காயத்ரியை தன் வீட்டிற்கு  அழைத்துச் சென்றார். அப்பொழுது  காயத்ரி மூன்று மாதம் கர்ப்பிணியாக இருந்தார்.  தாய் வீட்டிற்கு வந்த பிறகு கணவர் என்னை வீட்டிற்கு வந்து பார்க்கவுமில்லை,  பேசவும் இல்லை. ஆதலால் காயத்ரி ஏன் இவ்வாறு செய்கிறாய் என்று கேட்டதற்கு, ' நீ எனக்கு மனைவியே இல்லை'  என்று  உதாசீனப்படுத்தினார்.

 


கணவர் பேசாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று கண்டுபிடிக்க அவரை பற்றி விசாரித்தபோது அவருக்கு ஏற்கனவே 3 மனைவிகள் உள்ள அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதில் முதல் மனைவி அனிதா என்கிற இந்திரகுமாரி,  இரண்டாவது மனைவி தேவி, மூன்றாவது மனைவி கனகவல்லி ஆகியோரை திருமணம் செய்ததும், தன்னை நான்காவதாக திருமணம் செய்துள்ளதும் தெரியவந்தது. தொடர்ந்து காயத்ரி பிரசவத்திற்காக புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொழுது புதுச்சேரி வம்பாகீரபாளையத்தை சேர்ந்த பிரேமா என்கிற பிரபாவதியை ஐந்தாவதாக திருமணம் செய்துள்ளதும் தெரியவந்தது.

 


காயத்ரியை திருமணம் செய்யும் போது முதல் மனைவி அனிதாவுக்கும் தனக்கும் விவாகரத்து ஆகிவிட்டது என்று கூறி  திருமணம் செய்துள்ளார். ஆனால்  இருவருக்கும் விவாகரத்து ஆகவில்லை. இப்படித் தொடர்ந்து ஐந்து  பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தது குறித்து காயத்ரி கேட்டபோது  அடியாட்களை வைத்து அடிக்கவும், கொலை செய்யவும் திட்டம் போட்டு உள்ளார் எனத் தெரியவந்தது. தொடர்ந்து பல பெண்களை இவ்வாறு மோசடி செய்து திருமணம் செய்து வருகிறார். மேலும் இவர் மீது மூன்று சீட்டு லாட்டரி விற்பனை சம்பந்தமாக வழக்குகளும் நிலுவையில் உள்ளது.  இந்த புகார் குறித்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.