Skip to main content

கச்சநத்தம் கொலை வழக்கு; தீர்ப்பு ஒத்திவைப்பு! 

Published on 27/07/2022 | Edited on 27/07/2022

 

Kachannatham  case; Judgment deferred!

 

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகில் உள்ள கச்சநத்தம் எனும் கிராமத்தில் ஆதி திராவிட மக்கள் மீது கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி ஆவாரங்காடு எனும் கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு பிரிவினரை சேர்ந்தவர்கள் இரவில் கொடூரமான வகையில்  தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் மூன்று நபர்கள் கொல்லப்பட்டனர். கொடுங்காயத்தால் உடல் நலிவடைந்து ஒரு வருடம் கழிந்து மேலும் ஒருவர் இறந்தார். ‌5 நபர்கள் கொடுங்காயமுற்று ஊனமுற்றவர்களாக வாழ்ந்து வருகின்றனர். காவல்துறையின் புலனாய்வு முடிவடைந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிறார்கள் உள்ளிட்ட 10 நபர்கள் பிணையில் வெளியே வந்தனர்.

 

முதன்மைக் குற்றவாளிகளில் இரண்டு நபர்களின் பிணையை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தை அணுகி முறையிட்டதன் விளைவாகப் பிணையை ரத்து செய்து,  தொடர்புடையவர்கள் சரணடைய வேண்டுமென உச்சநீதிமன்றம் 10.04.2019 அன்று உத்தரவு பிறப்பித்தது. அதனால் சிறையில் இருக்கும் ஏனையோர் பிணையில் வருவது தடுக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தால் பிணை ரத்து செய்யப்பட்ட சிலர் உயர்நீதிமன்றத்தை அணுகி பிணை பெற முயற்சித்தனர்.

 

கடந்த 26.09.2019 அன்று, குற்றம் சாட்டப்பட்டவர்கள் பிணையில் வருவது இவ்வழக்கிற்கே பெரும் அச்சுறுத்தலாக இருக்கக் கூடும் என்றும் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற நோக்கிலும் ஒரு பொதுநல வழக்கை எழுத்தாளர் இளம்பரிதி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இம் முறையீட்டில் கச்சநத்தம் தொடர்பாக, உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் அனைத்து வழக்குகளிலும் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் முன்னிலையாக வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது. அடுத்த நாளே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட மனுதாரரின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு ஆணையிட்டது.

 

இந்நிலையில் வழக்கானது, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி விரைவு வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு, அரசு சிறப்பு வழக்கறிஞராக சின்னராசு என்பவர் நியமிக்கப்பட்டு, சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 33 நபர்களில் ஒருவர் இறந்துவிட, ஏனையோர் மீது வழக்கு நடந்து முடிந்திருக்கிறது. 

 

கச்சநத்தம் தொடர்பான வழக்கு சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக கருதியிருந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

மரவள்ளிக் கிழங்கு சாப்பிட்ட சிறுமிக்கு நேர்ந்த சோகம்!

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Tragedy happened to the girl who ate mana tuber

சிவகங்கை மாவட்டம், தமராக்கி பகுதியைச் சேர்ந்தவர் வன்னிமுத்து. இவருக்கு முத்தம்மாள் என்ற மனைவியும், மூன்று பெண் குழந்தைகளும் இருந்தனர். இந்த நிலையில், 13 வயதுள்ள மகள் சுவேதாவும், 10 வயது மகள் வனிதாவும் நேற்று (08-03-24) இரவு வீட்டில் மரவள்ளிக் கிழங்கை பச்சையாக சாப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இதையடுத்து, நள்ளிரவில் அவர்கள் உறங்கச் சென்றபோது உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டுள்ளனர். அதில் உணவு செரிமானமாகாமல் சுவேதா வீட்டிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, மற்றொரு மகளான வனிதாவை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மரவள்ளிக் கிழங்கு சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.