Skip to main content

சிறுத்தைகளின் தொடர் வேட்டை... -அச்சத்தில் மக்கள்.

Published on 22/11/2019 | Edited on 22/11/2019

சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகர் வனப்பகுதிகளில் சிறுத்தை புலிகளின் இனப்பெருக்கம் அதிகமாகி விட்டதோடு காட்டை விட்டு கீழே சமவெளி பகுதிகளுக்கும் சிறுத்தைகள் வரத்தொடங்கி விட்டது. மலை பகுதியையொட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்களின் வருவாய்க்காக ஆடு வளர்க்கிறார்கள் அவ்வாறான ஆடுகளை ருசி பார்த்த சிறுத்தைகள் தொடர்ந்து ஆடுகளை வேட்டையாடுவதாக மக்கள் கூறுகிறார்கள்.
 

increasing leopard's disturbance


பவானிசாகர் அருகே உள்ள பசுவபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி இவர் 5 க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வைத்து பராமரித்து வருகிறார். இரவு நேரத்தில் ஆடுகளை பசுவபாளையம் கிராமத்தில் உள்ள தனது வீட்டை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள பட்டியில் அடைப்பது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை வனத்தை விட்டு வெளியேறிய ஒரு சிறுத்தை பசுவபாளையம் கிராமத்தில் புகுந்து சுப்பிரமணிக்கு சொந்தமான பட்டியில் உள்ள 3 ஆடுகளை அடித்துக்கொன்று ருசித்தது.

கிராமத்திற்குள் சிறுத்தை புகுந்த தகவல் அறிந்த பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். ஊருக்குள் நுழையும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் தானியங்கி கேமராக்கள் பொருத்தி சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என கண்காணித்த உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து பவானிசாகர் வனத்துறையினர் நேற்று சிறுத்தையை பிடிப்பதற்காக கிராமத்தை ஒட்டியுள்ள விவசாய நிலத்தில் கூண்டு வைத்தனர். இந்த கூண்டில் ஆடு அல்லது நாய் கட்டி வைத்து இரவு நேரத்தில் வனத்துறை பணியாளர்கள் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சிறுத்தையை பிடிப்பதற்காக வனத்துறையினர் கூண்டு வைத்ததால் கிராம மக்கள் ஒரளவு நிம்மதியடைந்துள்ளனர்.

இதனிடையே சத்தியமங்கலம் வனப்பகுதியான புதுக்குய்யனூரில் மீண்டும் ஒரு சிறுத்தை ஆட்டை அடித்து தூக்கிச்சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சத்தியமங்கலம் அருகே உள்ள புதுக்குய்யனூர் கிராமம் வனப்பகுதியை ஒட்டியுள்ளது. இங்கு மூர்த்தி என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. விவசாயியான மூர்த்தி தனது தோட்டத்தில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார். 


நேற்று வழக்கம்போல் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை தோட்டத்தில் கட்டியிருந்தார். இந்நிலையில் நேற்று காலை மூர்த்தி தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகளில் ஒரு ஆடு காணாமல் போயிருந்தது. அந்த இடத்தில்.ஆட்டுு ரத்தம் சிதறிியிருந்தது. ஏற்கனவே இப்பகுதியில் அடிக்கடி சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் உடனடியாக அவர் பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

சிறுத்தை ஆட்டை அடித்து வனப்பகுதிக்கு கொண்டு சென்றிக்கிறது என்பதை  வனத்துறையினர் சிறுத்தையின் கால்தடம் மற்றும் வனப்பகுதியில் ஆட்டின் உடல் பகுதியை வைத்து உறுதிப்படுத்தினார்கள். ஆடுகளை ருசி பார்த்த சிறுத்தைகள் மனிதர்களைை கண்டால் விட்டு வைக்குமா என்ற அச்சத்தில் உள்ளனர் மலையையொட்டி வாழும் மக்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

நீலகிரியைத் தொடர்ந்து ஈரோடு; தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதீத வெப்பம் காரணமாக கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர்  விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் ஈரோட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் நள்ளிரவில் சிசிடிவி கேமரா பழுதானதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணும் மையம் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் அறையின் சிசிடிவி கேமரா நேற்று (28.04.2024) இரவு 11.30 மணியளவில் பழுதாகியுள்ளன. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர் இன்று (29.04.2024) அதிகாலை 3.30 மணியளவில் வேறு கேமராக்கள் பொறுத்தப்பட்டன. ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷும், அதிமுக சார்பில் ஆற்றல் அசோக் குமாரும், பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் விஜயகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பாக கார்மேகனும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு சம்பவங்களும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வாக்கு இயந்திரங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனத் திமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை நேரில் சந்தித்த திமுக எம்.பி, என்.ஆர்.இளங்கோ இதற்கான மனுவை அளித்துள்ளார். அதில் 'வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி முறையாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்கு இயந்திரங்கள் உள்ள அறையை சுற்றி 500 மீட்டர் சுற்றளவில் ட்ரோன் பறக்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.