Skip to main content

''அந்தப் படத்துக்கு நான் பண்ணமாட்டேன்'னு  சொன்னேன்;ஆனா பண்ணவேண்டியதாயிருச்சு'' - இளையராஜா சொன்ன சீக்ரெட்! 

Published on 17/11/2019 | Edited on 17/11/2019

கமல் 60’ எனும் பிரம்மாண்டமான விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

 

ilayaraja share in kamal 60


இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜாவும் கமலஹாசனும் ஒன்று சேர்ந்து பணியாற்றியபோது நடந்த பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்களை மகிழ்ச்சியாக நினைவு கூர்ந்தனர். அப்பொழுது ஒவ்வொரு பாடலை பாடுவதற்கு முன்பாகவும் அந்த பாடலுக்கான அறிமுகத்தை மற்றும் அந்த பாடலின்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை இளையராஜா குறிப்பிட்டார்.

ஒரு படம் பண்ண வேண்டுமென்று வந்தார். ஆனால் அந்த படம் முழுக்க கத்தியும் ரத்தமாக இருந்தது. அதனால் நான் பண்ண மாட்டேன் என்று சொன்னேன். ஆனால் கடைசியில் நான் அந்த படத்தை பண்ண வேண்டியதாயிருச்சு. அதற்கு காரணம் இப்பொழுது நான் பாடப் போற பாட்டுதான் என்று சொன்ன இளையராஜா விருமாண்டி படத்திலிருந்து 'உன்ன விட'  என்ற பாடலை பாடினார். அந்தப்பாடல் இருந்ததால்தான் விருமாண்டி படத்துக்கு இசையமைக்க ஒப்புக்கொண்டேன் என்றும் இளையராஜா கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்