Published on 08/03/2019 | Edited on 08/03/2019
![Police investigate Sri Lankans who penetrated near Indian Naval Camp](http://image.nakkheeran.in/cdn/farfuture/-dFiMh3CoUpH8FF4-W8f0dqpOsMsJFoMAS-7BkwARY4/1552034480/sites/default/files/inline-images/z67_0.jpg)
ராமநாதபுரம் ராமேஸ்வரத்தில் இந்திய கடற்படை முகாம் அருகே ஊடுருவிய இளைஞர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ராமேஸ்வரம் சேராங்கொட்டை கடற்கரையிலிருந்து கள்ளத்தனமாக அகதிகள் தப்பிச் செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் ராமேஸ்வரம் மரைன் போலீஸ் மட்டும் ராமேஸ்வரம் கியூ பிரிவு போலீசார் கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
![Police investigate Sri Lankans who penetrated near Indian Naval Camp](http://image.nakkheeran.in/cdn/farfuture/GbXPLLUmhkj9bnPK5ekvQ0sKU7GfkpjIZW-pWTzoZD8/1552034498/sites/default/files/inline-images/z68.jpg)
அப்போது இலங்கையில் இருந்து அகதிகளை அழைத்துச் செல்ல வந்த ஒரு பைபர் படகும் அதில் ஜீயான் மற்றும் சுகந்தபாலன் என்ற இரண்டு பேர் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.