Skip to main content

வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற முயற்சியா?

Published on 09/05/2019 | Edited on 09/05/2019

தமிழகத்தில் மே 19ஆம் தேதி நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில் தருமபுரி,தேனி, திருவள்ளூர், கடலூர் உட்பட 5 மக்களவை தொகுதிகளில் 13 வாக்குச்சாவடிகளில் மே 19ஆம் தேதிமறுவாக்கு பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று அறிவித்தது. இந்த நிலையில் மதுரை, தேனியைப் போல தமிழகம் முழுவதும் வாக்கு இயந்திரங்களை மாற்ற தேர்தல் ஆணைய அதிகாரிகள் துணையுடன் ஆளும்கட்சியினர் திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. அந்த குற்றச்சாட்டுக்களை உண்மையாக்கும் வகையில் தேர்தல் அதிகாரிகளும், கலெக்டரும் மாறி, மாறி கருத்துக்களை கூறிவருகின்றனர். இது இன்னும் அதிக சந்தேகத்தை உண்டாக்கியுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் ஓட்டுமொத்தமாக குற்றம்சாட்டியுள்ளன.
 

evm



தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நடந்த தேர்தலின்போது தர்மபுரியில் 8 வாக்குச்சாவடிகளில் கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டதாகவும், திருவள்ளூரில் ஓட்டுக்களின் எண்ணிக்கைக்கு அதிகமாக ஓட்டுக்கள் பதிவானதாகவும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதனால் மறு தேர்தல் நடத்தும்படி திமுக கோரிக்கை விடுத்தது. இது குறித்து தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளித்திருப்பதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்தியப்பிரதா சாஹூ கூறியிருந்தார். இதனால் அங்கு மறு தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேநேரத்தில், வாக்கு இயந்திரங்கள் அனைத்தும், பாதுகாப்பாக பல்வேறு கல்லூரிகளில் வைக்கப்பட்டுள்ளன. அந்த அறைகளுக்கு வெளியே சீல் வைக்கப்பட்டன. துப்பாக்கிய ஏந்திய 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. 

இந்த நிலையில் தேர்தல் நடந்து முடிந்த விட்ட நிலையில் திடீரென வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள ஓட்டுப்பதிவான இயந்திரங்களை மாற்றிவிட்டு, இவற்றை வைக்கப்போவதாக தகவல் பரவியது. தேனி மக்களவை மற்றும் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டப்பேரவை தொகுதிகளுக்களுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவார் சங்க கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டன. இங்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால், நள்ளிரவில் அங்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற ஆளும் கட்சியினர் திட்டமிடுவதாக தகவல்கள் வெளியாகின.இதனால் வாக்கு பதிவு எந்திரங்கள் மாற்ற முயற்சி ஏதும் நடக்கிறதா என்ற சந்தேகங்களை எதிர்கட்சிகள் எழுப்பிவருகின்றனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

“தனி ஒருவனாக குரல் கொடுத்தேன்” - விஷால் பகிர்வு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
vishal political speech latest in rathnam promotion event

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

ad

அந்த வகையில் திருச்சியை அடுத்த சிறுகனூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில்  இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் விஷால், ஹரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் மத்தியில் உரையாற்றினர். பின்னர் விஷால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ரத்னம் திரைப்படம் தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகவுள்ளது. 'சென்ட்ரல் போர்டு ஆப் பிலிம் சர்டிபிகேஷன்' மும்பையில் என்னிடம் லஞ்சம் கேட்டார்கள். அதனை எதிர்த்து தனி ஒருவனாக குரல் கொடுத்தேன். அதன் பிறகு, சிபிஐ நடவடிக்கை எடுத்தார்கள்.

சமூகத்தில் நடக்கும் தவறுகளுக்கு மாணவர்கள் குரல் கொடுக்க வேண்டும். நீங்கள் குரல் கொடுக்கவில்லை என்றால் மற்றவர்கள் உங்களை தவறாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. விஜய் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம். அரசியல் என்பது பொழுதுபோக்கு அல்ல. நான் அரசியலுக்கு வரக்கூடாது என வேண்டிக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகள் நடிகர்களாக மாறினால் நடிகர்களாகிய நாங்கள் அரசியல்வாதிகளாக மாறுவோம் . 'வேட்பாளர்கள் வாக்குக்கு பணம் கொடுத்தது மக்களுடைய பணம் தான். ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ஒரு லட்சம் அல்லது இரண்டு லட்சம் ரூபாய் தான் சம்பளம் என நினைக்கிறேன். பிறகு எப்படி இவர்களால் வாக்குக்கு இவ்வளவு பணம் என கொடுக்க முடிகிறது. இதன் பிறகு மக்களை ஏமாற்ற முடியாது” என்றார். 

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.