Skip to main content

சட்டப்பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது?-  ஆகஸ்ட் 10- ஆம் தேதி சபாநாயகர் முடிவு! 

Published on 08/08/2021 | Edited on 08/08/2021

 

How many days to hold the Legislative Assembly? - Speaker's decision on August 10!

 

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற ஆகஸ்ட் 13- ஆம் தேதி அன்று கலைவாணர் அரங்கத்தில் கூடுகிறது. அன்றைய தினம் நடப்பாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. முதன்முறையாக காகிதமில்லா நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். 

 

பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என சபநாயகர் தலைமையிலான பேரவையின் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் கூடி முடிவெடுக்கும். இந்த அலுவல் ஆய்வு குழு கூட்டத்தை வருகிற ஆகஸ்ட் 10- ஆம் தேதி அன்று கூட்டுகிறார் சபாநாயகர் அப்பாவு. இதில் பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது என முடிவடுக்கப்பட்டு அறிவிக்கப்படவிருக்கிறது.

 

சார்ந்த செய்திகள்