Skip to main content

புனித ஹஜ் பயணம் பெயரில் மோசடி !

Published on 02/05/2019 | Edited on 02/05/2019

இஸ்லாமியார்கள் தங்களுடைய வாழ்நாள் கனவாக வைத்திருப்பது புனித ஹஜ் பயணம். இந்த புனித பயணத்தை வாழ்க்கையில் ஒருமுறையேனும் சென்று விட வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்கான ஏற்பாடுகளை கொஞ்சம் கொஞ்சமாக செய்வார். அப்படி சேர்த்து வைத்திருந்த பணத்தையும் ஹஜ் பயணத்திற்கு ஏற்பாடு செய்கிறேன் என்று மோசடி செய்த சம்பவம் திருச்சியில் நடந்து உள்ளது.

 



திருச்சி உறையூர் கீரை கொல்லை பகுதியை சார்ந்தவர் அகமது பசீர் இவர் இஸ்லாமியர்களின் புனித பயணம் ஹஜ் பயணத்தை செல்ல முடிவு செய்தார்.

 

police


அதற்காக மேலும் தன்னுடன் 3 பேரை சேர்த்துக் கொண்டு டிராவல்ஸ் ஏஜென்சியிடம் பொறுப்பை ஒப்படைக்க முடிவு செய்தார். திருச்சி பீமநகர் பங்காளி தெருவில் டிராவல் ஏஜென்சி நடத்தி வரும் முகமது அனிபாவை சந்தித்துப் பேசினார். அவரும் அதற்காக அழைத்துச் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து தருவதாக உறுதியளித்தார். இதற்காக கட்டணமாக அகமது பசீர் மற்றும் அவருடைய நண்பர்களிடம் மூன்று பேரும் சேர்ந்து 10 லட்சத்து 60 ஆயிரத்து ஹஜ் பயணத்திற்கான ஏற்பாடுகள் செய்வதற்காக கொடுத்தனர்.

 



ஆனால் பணம் கொடுத்து பல நாட்கள் ஆகியும் ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான எந்தவித ஏற்பாடுகளில் செய்யாமல் டிராவல்ஸ் உரிமையாளர்கள் காலதாமதம் செய்துள்ளனர். குறிப்பிட்ட தேதியை தாண்டியும் இதற்கான ஏற்பாடுகள் செய்யாதால் அதிர்ச்சியடைந்த அவர்கள் தங்கள் பணத்தை திரும்ப கேட்டு கேட்டுள்ளனர் ஆனால் அவர் சரியான பதில் அளிக்கவில்லை முகமது அனிபா தங்களிடம் 10 லட்சத்து 60 ஆயிரத்து முதல் மோசடி செய்து விட்டதை அறிந்த அவர்கள் இன்னும் பேரதிர்ச்சி அதிர்ச்சி அடைந்தனர்.

 



இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் அகமது பசீர் சார்பில் வழக்கு தொடர்ந்தார் வழக்கை விசாரித்த மதுரை நீதிமன்றம் கிளை திருச்சி மாநகர போலீஸ் துணை ஆணையர் நிஷாவுக்கு முகமது ஹனிபா மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை கோரி உத்தரவிட்டது அதன்பேரில் முகமது அனிபா மீது 10 லட்சத்து 60 ஆயிரம் மோசடி செய்து தொடர்பாக திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.