Skip to main content

பணத்திற்காக இளம்பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக பயன்படுத்தும் யூடியூப் சேனல்... நடவடிக்கை தேவை!

Published on 06/08/2021 | Edited on 07/08/2021

 

 YouTube channel misrepresenting children...

 

அண்மைக் காலமாகவே யூடியூப் போன்ற இணையங்களில் வியாபார நோக்கத்தோடு ஆபாசமான செய்திகள், பேச்சுக்களை பதிவுடுபவர்களை காவல்துறை கைது செய்து வருகிறது. அதன் அடிப்படையில் அண்மையில் பப்ஜி கேம் மூலம் பிரபலமான மதன் என்பவர் ஆபாசமாக பேசி வெளியிட்ட கேம் வீடியோவை அடிப்படையாகக்கொண்டு அவர் கைது செய்யப்பட்டதோடு அந்த சேனலும் முடக்கப்பட்டது. இதற்கு முன்பே பல மாதங்களுக்கு முன்பு 'சென்னை டாக்ஸ்' என்ற யூடியூப் சேனலில் கருத்துக்கேட்பு என்ற பெயரில் பொது இடங்களில் கூடும் இளைஞர்களிடம், பெண்களிடம் ஆபாசமாக கேள்விகள் கேட்கப்பட்டு ஆபாசமாக பதில்கள் பெறப்பட்டு வியாபார நோக்கத்தோடு ஆபாசமாக வெளியிடப்பட்ட வீடியோக்கள் டெலிட் செய்யப்பட்டதோடு சம்பந்தப்பட்ட நபர்கள் கைதும் செய்யப்பட்டிருந்தனர்.

 

youtube

 

இவ்வாறு தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில், இதேபோல் கண்ணில் சிக்காத பல யூடியூப் சேனல்கள் ஆபாசம் என்பதை மையமாகக் கொண்டு வியாபார நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது. இதில் ராபின் எஸ்ஜே என்பவர் நடத்தி வரும் யூடியூப் சேனலில் ஆபாசமான கருத்துக்கள் கொண்ட வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. அதிலும் யூடியூப் வீடியோவின் முகப்பு பக்கத்தில் வைக்கப்படும் 'தம்ப்நெய்ல்' எனப்படும் விடீயோவின் முகப்பு புகைப்படத்தில் சம்பந்தமே இல்லாத இளம்பெண்களின் புகைப்படங்களை வைத்ததோடு 'பணமும் உண்டு சுகமும் உண்டு' என்ற டைட்டிலோடு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

 

youtube

 

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து காவல்துறை தொடர்ச்சியாக அறிவுறுத்தல்களை கொடுத்து வருகிறது. பாலியல் தொடர்பான விஷயங்களில் பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமிகள், இளம்பெண்களின் புகைப்படங்களை வெளியிடக்கூடாது என்று இருக்கும் நிலையில், சம்பந்தமே இல்லாத இளம்பெண்களின் புகைப்படங்களை அவருடைய வீடியோவின் முகப்பு பக்கத்தில் வைத்து ஆபாசமான தலைப்பையும் வைத்து வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த யூடியூப் சேனல் மட்டுமல்லாது இதுபோன்று தவறான கண்ணோட்டத்தோடு வீடியோக்களை வெளியிடும் அனைத்து சேனல்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ராபின் எஸ்ஜே என்ற இந்த சேனலில் முழுவதுமாக பாலியல் வியாபாரம், ஆண் விபச்சாரம் உள்ளிட்ட முழுக்க முழுக்க ஆபாச விஷயங்கள் தொடர்பாகவே அந்த நபர் வீடியோ வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.