Skip to main content

சமுதாய உணவு கூடங்களுக்கு மத்திய அரசு முழுமையாக நிதி வழங்க வேண்டும்! டெல்லி கூட்டத்தில் அமைச்சர் சக்கரபாணி பேச்சு!!

Published on 22/12/2021 | Edited on 23/12/2021

 

c

 

அம்மா உணவகம் போல சமுதாய உணவு கூடம் அமைக்கும் திட்டத்திற்கு பாத்திரங்கள், உணவு, தானிய கொள்முதல் உட்பட அனைத்து செலவுத் தொகையையும் மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாதிரி சமையல் கூடம் திட்டம் தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து மாநிலத்தைச் சேர்ந்த உணவுத் துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர் அது போல் தமிழக உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணியும் கலந்து கொண்டார்.

 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில்  உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பேசும் போது, " தமிழகத்தில் 40 ஆண்டுகளாக பொது வினியோகத் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக 650 சமுதாய உணவகங்களில் வேலைகளுக்கு மிக குறைந்த விலையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் இலவசமாக உணவு வழங்கப்பட்டது இதேபோன்று சமுதாய உணவுக் கூடங்கள் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு மேற்கொள்ள விருப்பது மகிழ்ச்சி உணவு திட்டங்களுக்கான நிலத்தை மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் வழங்கும். அடுத்ததாக கட்டடம் சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட அடிப்படை செலவுகள் மற்றும் உணவு தானிய கொள்முதல் பணியாளர் சம்பளம் போக்குவரத்து உள்ளிட்டவற்றை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும்.

 

இது ஏழைகளுக்கான திட்டம் என்பதால் பயனாளிகள் அடையாளம் காண அளவுகோல் தேவையில்லை இத்திட்டம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் இயற்கை பேரிடர் காலங்களில் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் எனவே போதிய உணவு வழங்க இத்திட்டத்தில் நிகழ்வை இருப்பதுடன் குறைந்தபட்சம் இரு வேளை உணவு வழங்க வேண்டும் அதற்கேற்ற வகையில் விதிகளை உருவாக்க வேண்டும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலில் படி ஒன்றிய அரசுடன் இணைந்து பசிப்பிணி ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத இந்தியாவை உருவாக்க உறுதுணையாக இருப்போம் என்று கூறினார்


 

சார்ந்த செய்திகள்

Next Story

திரவ நைட்ரஜன் உணவுப் பொருள்; உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
liquid nitrogen foodstuff; Food Safety Department action order

திரவ நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்க கூடாது என உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் துடிதுடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நைட்ரஜன் பிஸ்கட்டுக்கு எதிராக பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்தான். இது தொடர்பான தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் திரவ நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுப் பொருள் விற்கக் கூடாது என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. திரவ நைட்ரஜன் உணவுப்பொருள் விற்கப்படுகிறதா என ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் குழந்தைகளுக்கு நைட்ரஜன் ஐஸ் கலந்த எந்தவொரு உணவு பொருள்களையும் கொடுக்கக் கூடாது எனவும், உணவு விடுதிகளில் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுப் பொருள்களை விற்பனை செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Next Story

'பஞ்சுமிட்டாய் போல தடை செய்யப்படுமா நைட்ரஜன் பிஸ்கட்?-அதிர்ச்சியை ஏற்படுத்திய சிறுவனின் வீடியோ

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
'Will Nitrogen Biscuits be Banned Like Cotton Candy'- Boy's Shocking Video

நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் துடிதுடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நைட்ரஜன்  பிஸ்கட்டுக்கு எதிராக பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.

அண்மையில் சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்தான். இது தொடர்பான தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதில் அந்தச் சிறுவன் உயிரிழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

திரவ நைட்ரஜனை பிஸ்கட் உடன் சேர்த்து சாப்பிடும் பொழுது புகைப்பது போன்று வாய் மற்றும் மூக்கில் இருந்து புகை வரும். இதை ஒரு ஃபன் ஆன உணவாக பல்வேறு பொது இடங்களில் மற்றும் சுற்றுலா தளங்களில் விற்கப்பட்டு வருகிறது. கோவை, திருச்சி, சென்னை தீவுத் திடல் உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் பொருட்காட்சிகளில் நைட்ரஜன் பிஸ்கட் விற்கப்படுவதைப் பார்க்க முடிகிறது. திரவ நிலையில் மைனஸ் 196 செல்சியஸ் வெப்பநிலையில் இருக்கும் திரவ நைட்ரஜன் பிஸ்கட்டில் சேர்த்து பயன்படுத்துவது ஆபத்து என்கின்றனர் உணவுத்துறை வல்லுநர்கள்.

பொதுவாக உணவுப் பொருள்களை உறைய வைக்கவே ஆண்டாண்டு காலமாக திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உணவுப் பொருட்களைப் பதப்படுத்துவதற்கு திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்பட்டாலும் அது ஆபத்து நிறைந்ததாகவும் உள்ளது. ஒரே நொடியில் பொருட்களை உறைய வைக்கும் தன்மை கொண்டது. திரவ நைட்ரஜனை சிறிது திரவ நிலையில் எடுத்துக் கொண்டாலும் வயிற்றில் சென்று திரவ நைட்ரஜன் எவாபரேஷன் நடைபெற்று கடும் உடல் உபாதை ஏற்படுத்துவதோடு மரணத்திற்கும் இட்டுச் செல்லும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறைந்த அளவில் திரவ நைட்ரஜனை குறைவாக பயன்படுத்தும் பொழுது எந்த ஆபத்தும் இருக்காது எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் வெளியாகிய  இந்த வீடியோ பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அண்மையில் பஞ்சு மிட்டாயில் உள்ள நிறமி வேதிப்பொருள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என உறுதி செய்யப்பட்ட நிலையில் அதனை அரசு தடை செய்திருந்தது குறிப்பிடத் தகுந்தது.