Skip to main content

சிறுமியின் கருமுட்டை வியாபாரம்... நக்கீரன் செய்தி எதிரொலி... ஐவர் குழு அமைத்த முதல்வர்!

Published on 11/06/2022 | Edited on 11/06/2022

 

 Girl's egg business ... Echo of Nakkeeran news ... Chiefminister formed a group of five!

 

'16 வயது சிறுமிக்கு 16 முறை கருமுட்டை வியாபாரம்... கல்லா கட்டும் மருத்துவ உலகம்..!' என்ற தலைப்பில் ஈரோடு சிறுமியின் கருமுட்டை விவகாரம் பற்றி சென்ற நக்கீரன் இதழில் செய்தி வெளியாகியிருந்தது. விரிவான அச்செய்தியில் அரசு இதில் கவனம் செலுத்தி மருத்துவக் குழுவை அமைத்து சட்ட விதிகளை உருவாக்கி முறைப்படுத்த வேண்டும் என்பதையும் கூறியிருந்தோம்.

 

நக்கீரன் செய்தி எதிரொலியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு சார்பில் ஒரு குழு அமைத்து உத்தரவிட்டுள்ளார். சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் குடும்ப நலத்துறை இயக்குநர் துணை தலைவராகவும், மகளிர் அமைப்பைச் சேர்ந்த வசுதா ராஜசேகர், மகப்பேறு பேராசிரியர் டாக்டர் மோகனா, சட்டத்துறை உதவி செயலாளர் ஆகிய ஐந்து பேர் அடங்கிய இக்குழு செயல்படும். இதன்படி இனிமேல் 23 வயது முதல் 35 வயது உள்ள பெண்கள் மட்டுமே கருமுட்டை தானம் வழங்க முடியும். அதுவும் ஒரு பெண் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே அதுவும் 7 கரு முட்டைகள் மட்டுமே வழங்க முடியும். சட்டப்படி மருத்துவர்கள் செயல்பட வேண்டும். முட்டை வழங்கும் பெண்களை எந்த வகையிலும் தவறாக பயன்படுத்த கூடாது. கருத்தரிப்பு மையங்கள் எந்த மோசடிகளிலும் ஈடுபடக் கூடாது. அப்படி சட்ட விதிமீறல் நடந்தால் அந்த மருத்துவர்களுக்கு குறைந்த பட்சம் ஐந்து முதல் 10 லட்சமும் மறுமுறையும் தவறு செய்தால் 3 முதல் 8 ஆண்டுகள் சிறை தண்டனையும் உடன் 10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்கிறது இச்சட்டம்.  அரசு அமைந்த ஐவர் குழு இவற்றை நடைமுறைப்படுத்தும்.

 

 Girl's egg business ... Echo of Nakkeeran news ... Chiefminister formed a group of five!

 

இதன் மூலம் கரு முட்டை வியாபாரத்தில் பெருவணிக நோக்கோடு கொள்ளையடித்து வந்த தனியார் மருத்துவமனைகளுக்கு சட்டப்படியான நெருக்கடியும் தவறு செய்து தப்பிக்க முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு சிறுமிக்கு சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்த விவகாரத்தில் ஈரோட்டைச் சேர்ந்த இரண்டு தனியார் மருத்துவமனை நிர்வாகிகள், டாக்டர்கள் ஊழியர்களிடம் ஏற்கனவே  ஏ.டி.எஸ்.பி கனகேஸ்வரி தலைமையிலான போலீசார் விசாரணை செய்தார்கள். மேலும் சிறுமிக்கு கருமுட்டை எடுத்த விவகாரத்தில் சேலம், ஓசூர், ஆந்திர மாநிலம் திருப்பதி, கேரளா மாநிலம் திருவனந்தபுரம் ஆகிய தனியார் மருத்துவமனைகளுக்கும் விசாரணைக்கு நேரில் வந்து ஆஜராகுமாறு ஈரோடு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இந்த நிலையில் 11 ந் தேதி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஓசூர் தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த நிர்வாக இயக்குநர்கள், மருத்துவர்கள் மற்றும் ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த நிர்வாகிகள், மருத்துவர்கள் என  இரண்டு வாகனங்களில் 10 க்கும் மேற்பட்டோர் நேரில் வந்து எஸ்.பி. அலுவலகத்தில் ஆஜரானார்கள். அவர்கள் மருத்துவ பதிவேடுகள் முக்கிய ஆவணங்களையும் எடுத்துச் சென்றனர். அவர்களிடம் ஏ.டி.எஸ்.பி கனகேஸ்வரி தலைமையிலான போலீசார்  விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து ஈரோடு சிறுமியின் கருமுட்டை விவகாரம் அதிர்வலையைக் கூட்டி வருகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.