Skip to main content

துப்புரவு தள்ளுவண்டியில் முதியவர் இறுதி ஊர்வலம்!

Published on 25/10/2018 | Edited on 25/10/2018

தேனியில் உள்ள வாரச்சந்தையில் இறந்த ஆதரவற்ற சிவனாண்டி என்பவர் உடல் துப்புரவு பணியாளர்களால் தள்ளுவண்டியில் வைத்து தள்ளிச்சென்று அடக்கம் செய்யப்பட்டது பெரும் ஆச்சர்யத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

funeral in Cleanup Trolley in theni

 

தேனியிலிருந்து பெரியகுளம் செல்லும் சாலையில் உள்ள கவுமாரியம்மன் கோயில் அருகில் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு ஆதரவற்று இருந்து வந்த சிவனாண்டி கிடைக்கும் வேலைகளை செய்து கொண்டு சந்தை வளாகத்திலே தூங்கி நாட்களை கடத்தி வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம்  இரவு அவர் திடீரென உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இத்தகவலை அப்பகுதியில் உள்ள தொழிலாளர்கள் போலீசாருக்கு தெரிவித்தனர். அப்படியிருந்தும் கூட போலீசார் மெத்தன போக்கை கடைபிடித்துக்கொண்டு மறுநாள் காலையில் போலீசார் வந்தனர். அப்படியிருந்தும் கூட இறந்த சிவனாண்டி உடலை ஆம்புலன்ஸ் மூலம் அடக்கம் செய்ய கொண்டு செல்லாமல் நகராட்சியின் துப்புரவு பணியாளர்களை வர சொல்லி தள்ளுவண்டியில் சிவனாண்டியின் உடலை தள்ளுவண்டியில் வைத்தனர். அப்பொழுது அங்கிருந்தோர் வெள்ளை வேட்டி, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். ஆனால் தேனி மருத்துவமனையில் இலவச அமரர் ஊர்தி இருந்தும் கூட அதை ஏற்பாடு செய்யாமல் சிவனாண்டியின் உடலை தள்ளுவண்டியில் வைத்து பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அதை பார்த்த மக்கள் அதிர்ச்சியில் மூழ்கினார்கள்.

 

 

இதுபற்றி போலீசாரிடம் கேட்டபோது... தெரியாத நபர் என்றால்தான் எங்கள் தரப்பில் முறையாக அனைத்தையும் செய்ய முடியும். அவர் அங்கு நன்கு அறிமுகமாகவர் என்பதால் வழக்குப் பதிவு செய்யாமல் உடல் அடக்கத்திற்கு ஏற்பாடு செய்தோம் என்றனர். நகராட்சி ஆணையாளர் ராஜாராம் கூறுகையில், இறந்தவரின் உடல் ஏற்றிசெல்லப்பட்ட தள்ளுவண்டி நகராட்சிக்கு சொந்தமானது இல்லை. போலீசார் செய்ய கூடியதை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் இருவர் செய்தனர். இச்சம்பவத்திற்கும் நகராட்சிக்கு தொடர்பு இல்லை என்றார். இருந்தாலும் இறந்தவரின் உடலை தள்ளுவண்டியில் கொண்டு சென்று அடக்கம் செய்தது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது!

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேனி மக்களவை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து சீல்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இந்திய மக்களவைத் தேர்தல் முதல் கட்ட தேர்தலாக தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணியில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேனி மக்களவையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1788 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் சேகரிக்கப்பட்டு தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த (ஸ்டாங் ரூம்) பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

தேனி மக்களவையில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம், போடிநாயக்கனூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 69.87% வாக்குகள் பதிவாகியுள்ளது. நேற்று மாலை தேர்தல் முடிவ டைந்த நிலையில் வாக்குப்பதிவு மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேகரிக்கும் பணி இரவு முழுவதும் நடைபெ ற்றது.

Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இதனைத் தொடர்ந்து கொடுவார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்டாங் ரூமில் அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் சீல் வைக்கும் பணி நடைபெற்றது. ஸ்ட்ராங் ரூமில் அனைத்து பகுதிகளும் முழுமையாக மூடப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையின் நான்கு அடுக்கு பாதுகாப்பில்  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணிக்கை ஜூன் 04  நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 45 நாட்கள் உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.