Skip to main content

உணவு, பசி, வறுமை, இருப்பிடம்..! -புலம் பெயர் மக்களுக்குப் பிறந்த மண்னே நம்பிக்கை...

Published on 06/06/2020 | Edited on 06/06/2020

 

other state workers


கரோனா காலம் மனித குலத்திற்கே கொடிய காலம் தான் என்றாலும்... வயிற்றுப்பிழப்புக்காக ஊரு விட்டு ஊர்... சொந்த மாநிலம் விட்டு வெளி மாநிலம் எனப் புலம் பெயர்ந்து வந்த இடத்தில் உழைப்பைக் கொடுத்து அதன் மூலம் கிடைக்கப்பெற்ற வருமானத்தில் வாழ்ந்து வந்த அந்தப் புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வை மட்டுமல்ல எதிர்கால நம்பிக்கையையும் ஒட்டுமொத்தமாகச் சிதைத்து விட்டது இந்த கரோனா காலம்.
 


வாழ வந்த இடத்தில் எல்லா கதவுகளும் மூடப்பட்ட நிலையில் தங்கள் உடலோடு ஒட்டியிருக்கும் உயிரைப் பிடித்துக் கொண்டு பிறந்த மண் நோக்கி ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான அப்பாவி தொழிலாளிகள் நடந்து செல்லும் அவலம் நம் இந்திய மண்ணில் நிகழ்ந்தது. அரசாங்கம் இந்தக் கொடூரத்தை வேடிக்கை பார்க்கலாமா..?  என எதிர்க்கட்சிகள் முதல் பொதுமக்கள் வரை கேள்விகள் எழுப்ப மத்திய மாநில அரசுகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்கள் சொந்த ஊர் திரும்ப சிறப்பு ரயில் விடுவதாக அறிவித்தது.

அந்த அடிப்படையில் கடந்த சில நாட்களாக ஒவ்வொரு மாநிலத்திலிருக்கும் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை 20,000 ஆயிரம் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்களின் சொந்த மாநிலத்திற்குச் செல்ல மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பித்திருந்தனர். அவர்கள் பல்வேறு கட்டங்களாகச் சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.  
 

 


அவர்களுக்குத் தேவையான உணவு குடிநீர் பிஸ்கட் பாக்கெட் போன்றவையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி 05.06.202 வெள்ளிக்கிழமை மாலை ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 200 தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் தங்கள் சொந்த மாநிலத்திற்குச் செல்கின்றனர். இதற்காக அவர்கள் அனைவரும் ஈரோடு மாநகராட்சி மண்டபம் வந்தனர். அவர்களுக்கு தேவையான மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு உணவும் வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் மாலை சிறப்பு ரயில்கள் மூலம் ஜார்கண்ட்  மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தமிழகத்திலிருந்து பீகார், ஒடிசா, குஜராத், உ,பி., ராஜஸ்தான், மேற்கு வங்கம் என இதுவரை சுமார் மூன்று லட்சம் வட மாநிலத் தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊருக்கு இடம் பெயர்ந்துள்ளனர். மேலும் சில லட்சம் பேர் சொந்த ஊர் செல்ல காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
 

http://onelink.to/nknapp


ஆதார் கார்டு, டிஜிட்டல் கார்டு என ஒரே கார்டுக்குள் இந்திய மக்களை இணைக்கலாம் ஆனால்... உழைப்பு, வருவாய், உணவு, பசி, வறுமை, இருப்பிடம் இவையெல்லாம் ஒரே கார்டில் மக்களை இணைக்க முடியாது பிறந்த மண் எதுவோ அதுவே தங்களின் வாழ்வியல் நம்பிக்கை என்பதை மக்களுக்கு கரோனா உனர்த்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

முற்றுகைக்கு ரெடியான நிர்வாகி கைது; தொடரும் கீழ்பவானி வாய்க்கால் நீர் திறப்பு பேச்சுவார்த்தை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Executive arrested for siege; Negotiations on the opening of water by the Kilpawani canal continue

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்தில் 5-வது நினைப்புக்கு ஏப்ரல் 18ஆம் தேதி முதல் 13 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட வேண்டும். ஆனால் இந்த 5வது நினைப்புக்கு தண்ணீர் திறப்பது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளியிடாததால் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட கலெக்டருக்கும் மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில் இதுவரை அறிவிப்பு வெளியிடாததால் நேற்று காலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கீழ்பவானி வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினர் முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவியை சென்னிமலை போலீசார் அவர் வீட்டில் இருந்து கைது செய்து சென்னிமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்திருந்தனர். இதையடுத்து கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் சுதந்திர ராசு, வெங்கடாசலம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் சென்னிமலையில் குவிந்தனர். அதைத்தொடர்ந்து அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 5வது இணைப்புக்கு தண்ணீர் திறப்பது குறித்து வரும் 20 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தி, சுமூக முடிவு எட்டப்படும் எனத் தெரிவித்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட ஒருங்கிணைப்பாளர் ரவி விடுவிக்கப்பட்டார்.