Skip to main content

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7,987 பேருக்கு கரோனா உறுதி!

Published on 15/04/2021 | Edited on 15/04/2021

 

jkl

 

தமிழகத்தில் இன்று 7,987 பேருக்கு ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 2,558 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து 2,000-க்கும் அதிகமான கரோனா தொற்று பதிவாகி வருகிறது. பிற மாவட்டங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து இருந்து வருகிறது. இன்றைய பாதிப்புகளையும் சேர்த்து தமிழகம் முழுவதும் இதுவரை 9,62,734 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமானவர்களின் எண்ணிக்கை 4,176 ஆக உள்ளது. இதன் மூலம் இதுவரை குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 8,91,199 ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உள்ளது. இதன் மூலம், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12,999 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 95,387 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் 2,08,79,495 பரிசோதனைகள் இதுவரை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்