Published on 30/06/2018 | Edited on 30/06/2018

நேற்று காலை சென்னை முதல் மதுரை வரை செல்லும் தனியார் விமானத்தில் நேற்று காலை சசிகலா எம்.பி. உட்பட 76 பயணிகள் மற்றும் 4 விமான பணிக்குழு பணியாளர்கள் உட்பட 80 பேர் பயணம் செய்தனர். விமானம் புறப்படத்தொடங்கி ஓடுபாதையில் ஓடத்தொடங்கியபோது திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டறிந்தார். இது அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகளின் உத்தரவின்படி இழுவை வண்டி மூலம் விமானம் இழுக்கப்பட்டு புறப்பட்ட இடத்திலேயே நிறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து பொறியாளர் குழுவினர் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். பயணிகள் அனைவரும் ஓய்வறையில் தங்கவைக்கப்பட்டனர். சரிபார்ப்பு பணிகள் நிறைவடைந்து, கிட்டதட்ட மூன்றே கால் மணிநேரம் தாமதமாக விமானம் மீண்டும் புறப்பட்டது. விமானியின் துரித செயல்பாட்டினால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.