Skip to main content

அரசு வேலை ஆசை காட்டி பல லட்சம் ரூபாய் சுருட்டல்; கணவன் மனைவிக்கு வலைவீச்சு!

Published on 22/04/2023 | Edited on 22/04/2023

 

Extortion of lakhs of rupees by pretending to want a government job; Husband and wife attack!

 

சேலத்தில், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பல லட்சம் ரூபாய் சுருட்டி மோசடி செய்த கணவன், மனைவியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

சேலம் மாவட்டம், பெத்தாம்பட்டியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகன் சதீஷ். இவர், சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது: கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் என்னுடைய உறவினரான முருங்கப்பட்டியைச் சேர்ந்த அமுதவல்லி, அவருடைய கணவர் கணேசன் ஆகியோர் வருவாய்த்துறையில் அரசாங்க வேலை வாங்கித் தருவதாகக் கூறினர். அதற்காக அவர்கள் கேட்டதன் பேரில், 5 லட்சம் ரூபாய் கொடுத்தேன்.

 

என்னைப் போல், அய்யந்துரை, வனிதா, பிரபாகரன், பிரேமலதா, தமிழரசன், சரண்யா ஆகியோரும் லட்சக்கணக்கில் அவர்களிடம் அரசு வேலைக்காக பணம் கொடுத்தனர். இதையடுத்து, அமுதவல்லியும், கணேசனும் நாமக்கல் மாவட்ட வருவாய்த்துறையில் எனக்கு பணி ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளதாகக் கூறி என்னிடம் பணி நியமன ஆணை வழங்கினர். மற்றவர்களுக்கும் அதேபோல் வெவ்வேறு இடங்களில் பணி ஒதுக்கீடு வழங்கப்பட்டதாகக் கூறி, பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

 

பணி நியமன ஆணையுடன், உரிய அலுவலகங்களில் பணியில் சேர சென்றபோதுதான் அவர்கள் கொடுத்தவை அனைத்தும் போலி பணி நியமன ஆணைகள் என்பது எங்களுக்குத் தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள், அவர்களிடம் பணத்தைத் திருப்பிக் கேட்டோம். அவர்கள் தர மறுத்ததோடு, கொலை மிரட்டல் விடுத்தனர். அதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, எங்கள் பணத்தை மீட்டுத் தர வேண்டும்.

 

இந்தப் புகார் குறித்து மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் புஷ்பராணி விசாரணை நடத்தினார். முதல்கட்ட விசாரணையில், புகாரில் முகாந்திரம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அமுதவல்லி, கணேசன் ஆகியோர் மீது மோசடி, கூட்டுச்சதி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள கணவன், மனைவியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

அப்பாவையே அடித்துக்கொன்ற மகன்; விசாரணையில் அதிர்ச்சி

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
The son who attacked his father, shocked in the investigation

சொத்துக்காக தந்தையை மகனும் மருமகனும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பகுதியில் வசித்து வந்தவர் செல்வம். பேருந்து ஓட்டுனரான செல்வத்தைக் காணவில்லை என அவருடைய மருமகள் சசிகா கடந்த மூன்றாம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் சொத்து பிரச்சனை காரணமாக மகனும் மருமகனும் ஒன்று சேர்ந்து செல்வத்தை அடித்து கொலை செய்தது தெரிய வந்தது.

திருச்செங்கோடு அருகே திம்மராவுத்தம்பட்டி ஏரி பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் கொலை செய்த செல்வத்தின் உடலை புதைத்ததாக இருவரும் போலீசாருக்கு வாக்குமூலம் கொடுத்தனர். அதனடிப்படையில் அந்தப் பகுதிக்குச் சென்ற போலீசார் செல்வத்தின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து தோண்டி எடுத்து, உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக செல்வத்தின் மகன், மருமகன் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த மூன்று பேர் என ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். சொத்து தகராறு காரணமாக அப்பாவையே மகனும், மருமகனும் ஒன்று சேர்ந்து கொலை செய்தது அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Next Story

ஊர்காவல் படையினர் மீது போதை இளைஞர்கள் தாக்குதல்; வைரலாகும் வீடியோ

Published on 24/05/2024 | Edited on 24/05/2024
Intoxicated youth attack policemen; A viral video

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் போதை இளைஞர்கள் இருவர் பொது இடத்தில் ஊர்காவல் படையினருடன் சண்டையிட்டு மோதிக் கொள்ளும் பரபரப்பு காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த சகோதரர்கள் விஜயன்-தாமரைக் கண்ணன். இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது அண்ணாசிலை அருகே கூட்டம் அதிகமாக இருந்ததால் திடீரென பிரேக் அடித்தனர். இதில் இருவரும் நிலை தடுமாறி இருசக்கர வாகனத்திலிருந்து வழுக்கி விழுந்தனர்.

அப்போது அங்குப் பாதுகாப்பது பணியிலிருந்த ஊர்காவலர் படையினர் இருவரையும் விசாரிக்க வேண்டும் என அழைத்தனர். விசாரணையில் இருவரும் போதையிலிருந்தது தெரிந்தது. ஊர்காவல் படையினருடன்  இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு கொடூரமாகத் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் கூட்டம் கூடியது. இருப்பினும் விடாத சகோதரர்கள் இருவரும் ஊர்காவல் படையினரிடம் தொடர்ந்து கண்மூடித்தனமாகத் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.