Published on 08/01/2022 | Edited on 08/01/2022
![Excitement as a power line fell on a train at Aruppukottai](http://image.nakkheeran.in/cdn/farfuture/ruteaNIFfqnC6RB9FLjuvoNGrh9QHEnCKRGVsZW1YWo/1641610638/sites/default/files/inline-images/zzzzz2.jpg)
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மின்கம்பி இணைப்பு பணியின்போது கம்பி அறுந்து விரைவு ரயில் மீது விழுந்தது. அருப்புக்கோட்டை தொட்டியங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் மீது மின்கம்பி அறுந்து விழுந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. மின் இணைப்பு கொடுக்கப்படாததால் சென்னையிலிருந்து செங்கோட்டைக்கு சென்ற பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.