Skip to main content

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளைக்கு வாடிவாசலில் படுகாயம்!

Published on 02/05/2023 | Edited on 02/05/2023

 

Ex-minister Vijayabaskar bull seriously injured at Vaadivasa

 

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பதில் ஆர்வம் கொண்டுள்ளவர்.

 

ஜல்லிக்கட்டு போராட்டம் முடிந்த நிலையில் நடந்த ஜல்லிக்கட்டுகளில் அவரது 'கொம்பன் காளை' வாடிவாசல்களில் ‘நின்று’ விளையாடி பெயர் வாங்கியது. இந்த மகிழ்ச்சி சில ஆண்டுகள் கூட நீடிக்கவில்லை. 4 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டிலேயே அதிகமான வாடிவாசல்களைக் கொண்ட தென்னலூர் ஜல்லிக்கட்டில் 'கொம்பன் காளை' பங்கேற்றது. “வாடியிலிலிருந்து கொம்பன் வரப்போகுது” என்று வர்ணனையாளரின் அறிவிப்பைத் தொடர்ந்து ஆக்ரோசமாக சீறிப்பாய்ந்து வெளியே வந்த கொம்பன் வந்த வேகத்தில் தடுப்புத் தூணில் மோதியதில் அடிபட்டு இறந்தது. இந்த இழப்பு அவரது குடும்பத்திற்கான பேரிழப்பாக கருதப்பட்டது. கொம்பன் காளையை தனது தோட்டத்திலேயே அடக்கம் செய்து நாள்தோறும் பார்த்து வருகின்றனர்.

 

அதன் பிறகு தான் வளர்க்கும் காளைகளுக்கு மறைந்த கொம்பன் பெயரையே வைத்து வெள்ளை கொம்பன், சின்ன கொம்பன், கருப்பு கொம்பன் என பல காளைகளை தோட்டத்தில் வளர்த்து வந்தார். வெளியில் சென்று வந்தால் நேராக காளைகளை பார்த்த பிறகே வீட்டிற்குள் செல்வது மன நிம்மதி தரும் என்று கூறிவந்தார். காளைகளை பராமரிக்கவும் வாடிகளுக்கு கேரவேன்களில் ஏற்றிச் செல்லவும் பலர் அவரிடம் வேலையில் உள்ளனர்.

 

Ex-minister Vijayabaskar bull seriously injured at Vaadivasa

 

இந்த நிலையில் தான் இன்று புதுக்கோட்டை மாவட்டம் வடசேரிப்பட்டி பிடாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடந்த ஜல்லிக்கட்டில் 800 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். இதில் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டிருந்த நேரத்தில், அவரது 'கருப்புக் கொம்பன் காளை' வாடிவாசலில் இருந்து வரப்போகுது முடிஞ்சா புடிச்சுப்பாரு என்று வர்ணனையாளர் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் வீரர்கள் தயாராக, காளையுடன் வந்தவர்கள் துண்டுகளை வீசி வரவேற்க காத்திருந்த நேரத்தில் ரோஜா பூ மாலையுடன் வாடியிலிருந்து அதிவேகமாக சீறிப்பாய்ந்து வருவதைப் பார்த்த வீரர்கள் ஒதுங்கும் நேரத்தில் வந்த வேகத்தில் 'பழைய கொம்பன்' போல வாடிவாசல் தடுப்புக் கட்டையில் மோதி சரிந்தது.

 

கருப்புக் கொம்பன் அசைவற்று மயங்கிக் கிடந்த கருப்புக் கொம்பனை மீட்டு அவசர அவசரமாக ஒரத்தநாடு கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி உள்ளனர். கருப்புக் கொம்பன் அடிபட்டதால் மனமுடைந்து காணப்பட்டார் மாஜி. கடந்த மாதம் திருவப்பூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்ற கருப்புக் கொம்பன் காணாமல் போய் 2 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

விராலிமலையில் ஜல்லிக்கட்டு; விஜயபாஸ்கர் தலைமையில் நடப்பட்ட முகூர்த்தக்கால்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Muhurthakaal planting program for jallikattu competition at Viralimalai

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவில் உள்ளது. இங்கு வருடந்தோறும் சித்திரை மாத திருவிழாவானது வெகு விமரிசையாக நடைபெறும். அதனையொட்டி ஜல்லிக்கட்டு போட்டியானது திருவிழாவிற்கு முன்பு நடைபெறும் பூச்சொரிதல் விழா அன்று வெகு விமர்சியாக நடைபெறும். ஆனால் இந்தமுறை தேர்தல் விதிமுறைகளின் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி இல்லாமல் இருந்தது. அதனால் ஜல்லிக்கட்டு போட்டியின்றி  பூச்சொரிதல் விழா மட்டும் நடைபெற்றது.

தற்போது தேர்தல் முடிவடைந்ததையடுத்து ஜல்லிக்கட்டு கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உத்தரவு கிடைத்ததையடுத்து  வருகின்ற 30-ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதனையடுத்து அதற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியானது முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது.

அதில் ஜல்லிக்கட்டு திடலில் உள்ள முகூர்த்தக் காலுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் செய்து நடப்பட்டது. இதில் விழா கமிட்டியினர், சர்வகட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பேரிகார்டு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கான அரசாணையை உடனடியாகப் பெற்றுத்தந்த விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு கமிட்டி நிர்வாகிகள், சர்வகட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.