Skip to main content

டி.எஸ்.பி. VS இன்ஸ்பெக்டர்- வீதிக்கு வந்த குடும்ப அக்கப்போர்

Published on 25/01/2020 | Edited on 25/01/2020

தூத்துக்குடி மாவட்டத்தின் ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. சுரேஷ்குமார், அதே பகுதியின் செய்துங்கநல்லூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் இருவரும் குடும்ப வழியில் நெருங்கிய உறவினர்கள். அவர்கள் இருவருமே அடிப்படையில் தலைமைக் காவலர்களாக இருந்து பதவி உயர்வு பெற்று தற்போது பணியிலிருப்பவர்கள்.

செய்துங்கநல்லூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் ரகுராஜன், நேற்று காலை காவல்துறை அலுவலக பொது குறிப்பேட்டில் ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி.சுரேஷ்குமார் தனது குடும்ப பகை காரணமாக தன்னை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளதாக எழுதி வைத்து விட்டு மருத்துவமனையில் சேர்ந்தார். அந்த அலுவலக குறிப்பேட்டில் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் எழுதியிருப்பதாவது. கன்னியாகுமரி மாவட்டம், பிள்ளையார்புரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி.சுரேஷ்குமார். அவர் எனது மாமியருக்கு நெருங்கிய சித்தப்பா மகன் ஆவார். அவர்களுக்குள் குடும்ப பிரச்சனை இருந்து வரும் நிலையில், அந்த பகையுணர்வில் என்னை பல வழிகளில், நேரிலும் தொலைபேசி மூலமும் தகாத வார்த்தைகளால் மனம் வருந்தும்படி பேசி வருகிறார். இருப்பினும் நான் பொறுமையோடு நடந்துள்ளேன். இது என்னுடன் பணியாற்றும் அனைவருக்கும் நன்கு தெரியும்.

 

 DSP VS Inspector - Familyon the Road

 

கருங்குளம் பகுதியில் கேமரா பொருத்துவதற்கும், ஆதிச்சநல்லூர் பகுதியில் புறக்காவல் நிலையம் அமைப்பதற்கும் ஆட்களை பிடித்து தருமாறு கேட்டு வருகிறார். அதனால் ஸ்பான்சர் தேடி அலைய வேண்டியுள்ளதால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனது உடல் நிலையை கருத்தில் கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற செல்கிறேன். இவ்வாறு காவல் துறையின் பொது நாட்குறிப்பில் ரெகுராஜன் பதிவு செய்துள்ளார்.

நேற்று காலை வாக்கி டாக்கியில் ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. அழைப்பின் பேரில் மணக்கரைக்கு இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் சென்றாராம். இதனை நாட்குறிப்பில் அவர் பதிவு செய்யாமல் அவசரமாக சென்றுள்ளார்.

அப்போது காவல் நிலையத்திற்கு வந்த டி.எஸ்.பி். சுரேஷ்குமார் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் இல்லை என எழுதி வைத்து விட்டு மீண்டும் வாக்கி டாக்கியில் இன்ஸ்பெக்டரை தொடர்பு கொண்டிருக்கிறார். ரெகுராஜன், தான் தூதுகுழி தாண்டி மணக்கரை செல்வதாக கூறினாராம். அது சமயம் டி.எஸ்.பி. கடுமையான வார்த்தைகளால் அவதூறாக பேசினாராம். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. எனவே மருத்துவமனை செல்கிறேன் என காவல் துறையின் அலுவலக பொது குறிப்பேட்டில் குறிப்பு எழுதி வைத்து விட்டு இன்பெக்டர் ரெகுராஜன் சென்றுள்ளார்.

காவல்துறை மட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இது குறித்து துறைரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்கிறார்கள் மாவட்டக் காவல் துறை அதிகாரிகள்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.