Skip to main content

எம்.பி.யின் மகனை கைது செய்த தமிழக காவல்துறை! 

Published on 23/06/2022 | Edited on 23/06/2022

 

dmk MP's son arrested by police

 

தி.மு.க.வைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா அதிரடியாக காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கடந்த ஜூன் 11- ஆம் தேதி அன்று உளுந்தூர்பேட்டை அருகே தனியார் ஆம்னி பேருந்தும்,தி.மு.க.வைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகனும், பா.ஜ.க பிரமுகருமான சூர்யாவின் காரும் மோதிக்கொண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் தன் காருக்கு ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பா.ஜ.க பிரமுகர் சூர்யா அந்த தனியார் பேருந்து நிறுவனத்தின் பேருந்தை எடுத்துச் சென்று பணம் கேட்டு மிரட்டுவதாகப் பேருந்தின் உரிமையாளர் திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். 

 

இதையடுத்து, சூர்யா மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை இன்று அதிரடியாக கைது செய்தனர். 

 

சார்ந்த செய்திகள்