Published on 15/09/2020 | Edited on 15/09/2020

அண்ணாவின் 112-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் தே.மு.தி.க துணை செயலாளர் ப.பார்த்தசாரதி, மன்ற செயலாளர், கழக மகளிர் அணி துணை செயலாளர், தொண்டர் அணி மாநில செயலாளர், தொழிற்சங்க பேரவை செயலாளர், வடசென்னை மாவட்ட கழக செயலாளர், மற்றும் மாவட்டம், பகுதி, வட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.