Skip to main content

ஆலயங்களை திறக்க அரசு முன்வரவேண்டும்... இ.ம.க.மு.க. வேண்டுகோள்

Published on 06/05/2020 | Edited on 06/05/2020
dd


இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், உடலையும் உறவுகளையும் பலவீனமாக்கும் மதுக்கடைகளை திறப்பதைவிட உள்ளத்திற்கு உந்து சக்தியை தரும் ஆலயங்களை திறக்க தமிழக அரசு முன்வரவேண்டும் என இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத் தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் 7 ம்தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு இல்லத்தரசிகளுக்கும், மது இல்லாத தமிழகத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் சான்றோருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக, ஆந்திர மாநிலங்களில் திறக்கப்பட்ட மதுக்கடைகளுக்கு எல்லைப்பகுதியிலுள்ள மக்கள் சென்றதையும், தமிழகத்தில் விற்பனையாகும் கள்ளச்சாராயத்தை தடுப்பதற்காகவும் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்கிறோம் என அரசு விளக்கமளித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது  போல் உள்ளது. 

சமூக விலகலை கடைபிடிக்க காவல்துறை உதவியுடன் நடைபெற்ற கோயம்பேடு சந்தை மூலம் கரோனோ தொற்று நோய் தமிழகத்தின் மூலை முடுக்களைகூட பதம்பார்த்து வரும் நிலையில், மதுக்கடைகளை திறந்து மற்றொரு கூட்டத்தை கூட்டினால் அதன் தாக்கம் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும். 

அதற்கு மாற்றாக உள்ளத்திற்கு அமைதியையும், உயர்சிந்தனையையும் அளிக்கும் கோவில்களை திறந்து சமுக இடைவெளியுடன் பக்தர்களை அனுமதிப்பதோடு, பட்டினியோடு போராடும் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினால் அனைத்து தரப்பிரனாலும் அது வரவேற்று பாராட்டப்படும். குறிப்பாக இல்லத்தரசிகளின் இதயங்களில் இந்த அரசின் செயல்பாடுகள் எப்போதும் பதிந்திருக்கும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  
 

சார்ந்த செய்திகள்

Next Story

3 நாள்கள் விடுமுறை; மதுக்கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Drinkers gathered in bars for holiday due to election

மக்களவைத் தேர்தலையொட்டி 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டதையொட்டி செவ்வாய்க்கிழமை (16-04-24) இரவு மதுக்கடையில் மதுப்பிரியர்களின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் ஏப்ரல் 17, 18, 19 ஆகிய 3 நாட்கள் அரசு (டாஸ்மாக்) மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி டாஸ்மாக் கடையுடன் இணைந்து செயல்படும் மதுக்கூடங்கள், ஏப்ரல் 2 முதல் எப்ரல் 11 வரை (ஏப்ரல் 6 நீங்கலாக) அனைத்து மதுக்கூடங்களும் மூடப்படும். இந்த 3 நாள்களில் மதுபானங்களை விற்பனை செய்தாலோ அல்லது வேறு இடங்களுக்கு மதுபாட்டில்களை கொண்டு சென்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று (16-04-24) இரவுடன் மதுக்கடைகள் 3 நாள்களுக்கு மூடப்படும் என்பதால், திருச்சியில் மதுப்பிரியர்கள் தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். ஏராளமானோர் கடைகளை முற்றுகையிட்டு 3 நாள்களுக்குத் தேவையான மதுவகைகளை வாங்கிச்சென்றனர். இதனால் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

Next Story

மக்களவைத் தேர்தல்; மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Lok Sabha elections; Orders to close liquor shops!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

அதில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. 

இந்த நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி ஏப்ரல் 17,18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்த சுற்றறிக்கை, அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதியும் மதுக்கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.