Skip to main content

தனிப்படையினரை நேரில் அழைத்துப் பாராட்டிய காவல்துறை துணைத்தலைவர்!

Published on 24/01/2022 | Edited on 24/01/2022

 

 

திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் ஆடு திருடும் நபர்களை பிடிப்பதற்காக உதவி ஆய்வாளர் தலைமையில் 7 காவலர்களை கொண்டு அமைக்கப்பட்டது. தனிப்படையினர் கடந்த இரண்டு மாதங்களில் ஆடு திருட்டு சம்பந்தமாக மொத்தம் 34 வழக்குகள் பதிவு செய்து 14 குற்றவாளிகள் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சுமார் ரூ.7,35,000/- மதிப்புள்ள 147 ஆடுகளை மீட்டுள்ளனர். ஆடு திருடுவதற்காக பயன்படுத்திய 8 வாகனங்களை பறிமுதல் செய்யதுள்ளனர்.தனிப்படையினரின் இந்த சிறந்த பணிக்காக அவர்களை நேரில் அழைத்து திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சான்றிதழ்கள் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

 

திருட்டு செயல்களில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்காக திருச்சி சரகத்தில் ஒவ்வொரு உட்கோட்டத்திற்கு ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தின் பெரம்பலூர் உட்கோட்ட தனிப்படையினர் கொள்ளை வழக்கான பெரம்பலூர் காவல் நிலைய குற்ற எண் 1555/21 மற்றும் 8 குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 6 குற்றவாளிகளை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 31 1/2 சவரன் தங்க நகைகள், 464 கிராம் வெள்ளி மற்றும் ரூ. 60,000 மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர்.

 

இதே போன்று பெரம்பலூர் மாவட்டத்தின் மங்களமேடு உட்கோட்ட தனிப்படையினர் கொள்ளை வழக்கான கைகளத்தூர் காவல் நிலைய குற்ற எண் 202/21 மற்றும் 6 குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 3 குற்றவாளிகளை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 8 வெள்ளி கடவுள் சிலைகள் உட்பட ரூ 1,50,000 மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர். தனிப்படையினரின் இந்த சிறந்த பணிக்காக அவர்களை நேரில் அழைத்து திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சான்றிதழ்கள் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

 

மேலும் இது போன்று குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க சரக தனிப்படையினருக்கு திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் அறிவுரை வழங்கினார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.