Skip to main content

இது ஜனநாயக நாடா? இல்லை போலீஸ் நாடா?;மாவட்ட ஆட்சியருக்கு அறிவுரைகளுடன் நீதிபதி கேள்வி

Published on 01/08/2018 | Edited on 27/08/2018

 

high court

 

 

 

மக்கள் அதிகாரம் அமைப்பின் தூத்துக்குடி மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் ஹரிராகவன். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக இவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளிலிருந்து உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

இந்நிலையில் ஹரிராகவன் கடந்த வாரம் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதை ரத்து செய்யக்கோரி அவரது மனைவி சத்தியபாமா உயர் நீதிமன்ற கிளையில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் சி.டி.செல்வம், பஷீர்அகமது அமர்வில்  விசாரணைக்கு வந்த போது " மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் அஜ்மல்கான் வாதிட்டார், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்குகளில் மனுதாரரின் கணவருக்கு ஜூலை 24-ல் ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்த மனு நேற்று விசாரணையில் இதையடுத்து போலீஸாரின் நடவடிக்கை மீது அதிருப்தி அடைந்த நீதிபதிகள், நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ள நிலையில் மனுதாரரின் கணவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தது எப்படி? என கேள்வி எழுப்பினர்.
 

பின்னர் நீதிபதிகள்  உத்தரவு பிறப்பித்து உள்ள நிலையில் வேன்டுமேன்றே அவர் மீது தேசிய பாதுகாப்பு வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது . இங்கு நடப்பது ஜனநாயக நாடா? இல்லை போலிஸ் நாடா? என்று  நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.பின்னர், இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இன்று காலை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் நேற்று உத்தரவிட்டனர்.

 

 

 



இதனை தொடர்ந்து இன்று நீதிமன்றத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் ஆஜராகினர். அப்போது நீதிபதிகள் எதன் அடிப்படையில் இவர் மீது தேசிய பாதுகாப்பு வழக்கு பதிய பட்டது என கேள்வி எழுப்பினார். கடந்த ஜூலை 20 தேதி அன்று மாவட்ட கண்காணிப்பாளர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கீழ் கைது செய்ய பரிந்துரை செய்திருந்தார் அதன்படி வழக்கு பதிவு செய்யபட்டது என்றார்.இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் ஜூலை 26 மாலை 6:10 மணிக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டது என்றார் .


இதனை பதிவு செய்த நீதிபதிகள் சி.டி. செல்வம் பசீர் அகமது மாவட்ட ஆட்சியருக்கு சில அறிவுரைகள் வழங்கினர்.
அதில் மாவட்ட ஆட்சியர்யின் ஒரு கையெழுத்து தனி நமபரின் சுதந்திரத்தை பாதிக்கும் படி இருக்க கூடாது. ஆகையால்  மாவட்ட ஆட்சியர் ஓவ்வொரு கையெழுத்து போடுவதற்கு முன்பு அதன் முழு விவரத்தை ஆராய்ந்து உறுதி செய்த  பின் கையெழுத்து இட வேண்டும் என்றனர்.

 

 


மேலும் காவல்துறை கெடுக்கும் ஆவணங்களில் நீதிமன்றம் என்ன கூறி உள்ளது என்பதை கடைசி நிமிடம் வரை ஆய்வு செய்தபின் தான் கையெழுத்து இட வேண்டும் என்று கூறிய நீதிபதிகள்  இனி நீங்கள் இது போன்று செயல் பட மாட்டீர்கள்  என்று நீதிமன்றம் நம்புகிறது.


வழக்கறிஞர் ஹரி ராகவன் மீது போட பட்ட தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து செய்யபடுகிறது என உத்தரவிட்டனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

Next Story

31 வது முறையாக நீட்டிப்பு; நீதிமன்றம் அதிரடி

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Extension for the 31st time; Court action

போக்குவரத்துத்துறையில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதியதாக மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில்  இன்று நடைபெற்ற விசாரணைக்கு பிறகு மேலும் 15 நாட்களுக்கு செந்தில் பாலாஜிக்கான நீதிமன்ற காவலை 31 ஆவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.