Skip to main content

தமிழகத்திற்கு 7-ஆம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை!!- அதீத மழைக்கு வாய்ப்பு

Published on 04/10/2018 | Edited on 04/10/2018

 

rain

 

தமிழகம் மற்றும் கேரளாவிற்கு தொடர்ந்து 5 நாட்கள் கனமழைக்கும், மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தற்போது தமிழகத்திற்கு  7-ஆம் தேதி ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மேற்கு தொடர்ச்சிமலை பகுதிகளில் வரும் 7-ஆம் தேதி முதல் கன மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

 

மேலும் வரும் 5-ஆம் தேதி தென்கிழக்கு அரபிக்கடலில் புதிதாக உருவாக இருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து பின்னர் புயலாக மாறும். அதேபோல் வரும் 8-ஆம் தேதி மற்றோரு காற்றழுத்த தாழ்வுபகுதி தென்மேற்கு வாங்க கடலில் உருவாகும் எனவும் இதனால் தமிழகம் மற்றும் கேரளாவிற்கு தொடர்ந்து 5 நாட்கள் கனமழைக்கும், மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பப்பதால் தமிழகத்திற்கு 7-ஆம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டதை அடுத்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்