Skip to main content

புதுச்சேரியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை! சமூக அமைப்புகள் குற்றச்சாட்டு! 

Published on 29/03/2020 | Edited on 29/03/2020


 
புதுச்சேரியில் கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என சமூக அமைப்புகள் குற்றம் சாற்றியுள்ளன. 
 

இதுகுறித்து மக்கள் வாழ்வுரிமை இயக்கம்,  திராவிடர் விடுதலைக் கழகம், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, தமிழர் களம், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை ஆகிய அமைப்புகள் அரசுக்கு கோரிக்கைகள் விடுத்துள்ளன. 
 

அதில் "கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை.  நகரங்களில் மட்டுமே சில பணிகள் நடக்கின்றன. கிராமப்புறங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்படுகின்றன. எனவே புதுச்சேரி ஒன்றியத்து ஆட்சி பரப்பினைப் பேரிடர் பாதித்தப் பகுதியாக உடனே அறிவிக்க வேண்டும், 


தேவையானப் பேரிடர் மேலாண்மை நிதியினைப் போர்க்கால அடிப்படையில் மத்திய அரசிடமிருந்து பெற நடவடிக்கை எடுக்க வேண்டும், புதுச்சேரி அரசுப் பொது மருத்துவமனைகள் (GH), சமுதாய நலவழி மையங்கள் (CHC), ஆரம்ப சுகாதார நிலையங்கள் (PHC) என அனைத்திலும் உயிர் காக்கும் மருந்துகளை உடனே வழங்கிட வேண்டும், பேரிடர் மேலாண்மைக் குழுக்களை நகரங்கள், கிராமங்கள் தோறும் அமைத்திட வேண்டும், சுகாதாரக் குழு, உணவுப் பொருட்கள் வழங்கும் குழு, கண்காணிப்புக் குழு போன்ற குழுக்களை உள்ளூர் மட்டத்தில் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்,
 

puducherry

 




அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகள், படுக்கை வசதி, மருத்துவக் கருவிகள் போதிய அளவில் இல்லாத சூழலில் அரசு கொரோனா பாதிப்பை எப்படி தடுக்கப் போகிறது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அரசு உடனடியாக மேற்சொன்ன அடிப்படை கட்டமைப்புப் பணிகளில் கவனம் செலுத்திட வேண்டும், தற்போழுது தெளிக்கப்படும் கிரிமி நாசினி மருந்துக்கள் போதுமானதாக இல்லை என்பதால், அரசு மாநிலம் முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் கிரிமி நாசனி மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், உணவுப் பொருட்கள், மளிகைப் பொருட்கள், காய்கறிகள் போன்றவற்றை நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும், நடுவண் அரசு வறுமையில் உள்ளவர்களுக்கு ரூ.1000 நிவாரணம், அரசி, கோதுமை என பலவற்றை அறிவித்த நிலையில், புதுச்சேரி அரசு ரூ. 2000 நிவாரணம் அறிவித்திருப்பது என்பது போதுமானதாக இருக்காது. எனவே அரசு உடனடியாக குடும்பத்திற்கு குறைந்தபட்சம் ரூ. 10,000 அறிவிக்க வேண்டும். அதனைக் காலதாமதம் செய்யாமல் உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முதியோர், விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு மத்திய அரசு ரூ.1000 நிவாரணம் அறிவித்துள்ளது. இதில் புதுச்சேரி அரசு 10 சதவீதம் மட்டுமே நிதி அளிக்க வேண்டியுள்ளது. எனவே, மேற்சொன்ன நிவாரணத் தொகையினை ஏப்ரல் முதல் வாரத்திலேயே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரோனா தடுப்பு நடவடிக்கைகள் கால வரிசைப்படி என்ன என்ன செய்யப் போகிறது என்பதை விளக்கி எல்லா அம்சங்களும் உள்ளடக்கிய அறிக்கை (Comprehensive Report) ஒன்றை உடனடியாக வெளியிட வேண்டும்.
 

கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தேவையான நிதியினை மத்திய அரசிடமிருந்து பெறுவதற்காக துணைநிலை ஆளுநரும், முதல்வரும் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு; பொதுமக்கள் சாலை மறியல்!

Published on 11/06/2024 | Edited on 11/06/2024
puducherry redyarpalayam incident Public road blocks

புதுச்சேரியில் உள்ள  ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில் வீட்டில் இருந்த மூதாட்டி ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். அதனைத் தொடர்ந்து அவரை காப்பாற்ற சென்ற மகளும் வீட்டுக்குள்ளேயே மயங்கி விழுந்திருக்கிறார். இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தது தெரியவந்தது. காரணமே தெரியாமல் இருவர் உயிரிழந்தது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் பாக்கியலட்சுமி (15) வயது சிறுமி, செந்தாமரை (72) அவருடைய மகள் காமாட்சி ஆகிய மூவர் உயிரிழந்துள்ளனர். பாதாள சாக்கடையில் இருந்து விஷவாயு கழிவறை வழியாக வீட்டுக்குள் புகுந்ததாக முதலில் தகவல் வெளியானது. விஷவாயுவின் தன்மை குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் வருவாய்த்துறையினர், காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் மருத்துவத் துறையினர் குவிந்தனர். 

puducherry redyarpalayam incident Public road blocks

இதன் தொடர்ச்சியாக அங்கு ஆய்வு நடைபெற்ற நிலையில் பாதாளச் சாக்கடையில் விஷவாயு கசிவு இல்லை எனப் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்தார். வீட்டுக்குள் வேறு ஏதேனும் நடந்ததா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். இத்தகைய சூழலில் பாதிக்கப்பட்ட பகுதியில் புதுவை முதல்வர் ரங்கசாமி ஆய்வு செய்தார். இதனையடுத்து இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த 15 வயது சிறுமி பாக்கியலட்சுமியின் குடும்பத்தாருக்கு 30 லட்சம் நிதியுதவியும், மற்ற பெண்களான செந்தாமரை, காமாட்சி ஆகியோர் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் ரூபாயும் நிதியுதவி அறிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க இரு குழுக்களை அமைத்து உத்தரவிட்டார்.

அதே சமயம் இப்பகுதியில் மேலும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் விதமாக வீடுகளில் உணவு சமைக்கத் தடை விதிக்கப்பட்டது. எனவே அப்பகுதியில் அரசு சார்பில் வீடு வீடாகச் சென்று உணவு விநியோகம் செய்யும் பணியும் நடைபெற்றது. அதோடு வீட்டுக் கழிவறைகளுக்குத் தவறாக இணைப்பு வழங்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தவும் முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த கோரி கோரி அப்பகுதி மக்கள் புதுச்சேரி - விழுப்புரம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 

puducherry redyarpalayam incident Public road blocks

அப்போது இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அலட்சியமாக இருந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், உயிரிழந்த மூவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், கழிவுகளை வெளியேற்ற புதிய பைப் லைன் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மறியலில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். 

Next Story

விஷவாயு தாக்கிய விவகாரம்; சமைக்கத் தடை விதிப்பு!

Published on 11/06/2024 | Edited on 11/06/2024
Puducherry Redyarpalayam incident Prohibition to cook

புதுச்சேரியில் உள்ள  ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில் வீட்டில் இருந்த மூதாட்டி ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். அதனைத் தொடர்ந்து அவரை காப்பாற்ற சென்ற மகளும் வீட்டுக்குள்ளேயே மயங்கி விழுந்திருக்கிறார். இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தது தெரியவந்தது. காரணமே தெரியாமல் இருவர் உயிரிழந்தது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பாக்கியலட்சுமி(15) வயது சிறுமி, செந்தாமரை(72) அவருடைய மகள் காமாட்சி ஆகிய மூவர் உயிரிழந்துள்ளனர். பாதாள சாக்கடையில் இருந்து விஷவாயு கழிவறை வழியாக வீட்டுக்குள் புகுந்ததாக முதலில் தகவல் வெளியானது. விஷவாயுவின் தன்மை குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் வருவாய்த்துறையினர், காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் மருத்துவத் துறையினர் குவிந்தனர்.

இதன் தொடர்ச்சியாக அங்கு ஆய்வு நடைபெற்ற நிலையில் பாதாளச் சாக்கடையில் விஷவாயு கசிவு இல்லை எனப் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார். வீட்டுக்குள் வேறு ஏதேனும் நடந்ததா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். இத்தகைய சூழலில் பாதிக்கப்பட்ட பகுதியில் புதுவை முதல்வர் ரங்கசாமி ஆய்வு செய்தார். மேலும் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த 15 வயது சிறுமி பாக்கியலட்சுமியின் குடும்பத்தாருக்கு 30 லட்சம் நிதியுதவியும், மற்ற பெண்களான செந்தாமரை, காமாட்சி ஆகியோர் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் ரூபாயும் நிதியுதவி அறிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க இரு குழுக்களை அமைத்து உத்தரவிட்டுள்ளார். 
 

Puducherry Redyarpalayam incident Prohibition to cook

இந்நிலையில் இப்பகுதியில் மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக வீடுகளில் உணவு சமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அப்பகுதியில் அரசு சார்பில் வீடு வீடாக சென்று உணவு விநியோகம் செய்யும் பணியும் நடைபெற்றுள்ளது. அதே சமயம் வீட்டு கழிவறைகளுக்கு தவறாக இணைப்பு வழங்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தவும் முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.