Skip to main content

கோவை: செக் மோசடி செய்ததாக கூறி மலேசியாவை சேர்ந்தவர் கைது

Published on 11/12/2017 | Edited on 11/12/2017
கோவை: செக் மோசடி செய்ததாக கூறி மலேசியாவை சேர்ந்தவர் கைது

சூலூர் நீதிமன்றத்தில் செக் மோசடி செய்ததாக கூறி மலேசியாவை சேர்ந்த பொன்னையா என்பவர் கைது செய்யப்பட்டார்.

கோவை கருமத்தம்பட்டீயை சேர்ந்த சந்திரசேகர் என்பவருக்கு 8 லட்சம் ரூபாய் காசாலையை மலேசியாவை சேர்ந்த பொன்னையா தந்துள்ளார். அதில் பணம் இல்லையென காசோலை திரும்பி வந்துள்ளது. இதனால் கருமத்தாம்பட்டி காவல் நிலையத்தில் சந்திரசேகர் புகார் தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக மலேசியாவிலிருந்து கோவை காராத்தே நிகழ்சிக்கு வந்த பொன்னையாவை போலீஸ் உதவியுடன் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். 

இருவருக்கும் காராத்தே அசோசியேசன் தலைவர் பதவி சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அருள்

சார்ந்த செய்திகள்