Skip to main content

'கல்லூரிக் கல்வி இயக்குநர் நியமனம் ரத்து' - உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 29/10/2020 | Edited on 29/10/2020

 

chennai high court order tamilnadu government

 

கல்லூரிக் கல்வி இயக்குநர் பூரணசந்திரனை நியமித்த அரசின் உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

திருவாரூர் திரு.வி.க. கல்லூரியின் முதல்வர் கீதா, "தன்னை விட ஜூனியரான பூரண சந்திரன் கல்லூரிக் கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசு விதிமுறைகளைப் பின்பற்றாமல் கல்லூரிக் கல்வி இயக்குநரை நியமனம் செய்து ஆணையிட்டுள்ளது. எனவே தமிழக அரசின் ஆணையை ரத்து செய்ய வேண்டும்" எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

 

இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று (29/10/2020) விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதி, கல்லூரிக் கல்வி இயக்குநர் பூரண சந்திரனை நியமித்த தமிழக அரசின் உத்தரவை ரத்து, விதிகளைப் பின்பற்றி கல்லூரிக் கல்வி இயக்குநர் தேர்வு நடைமுறைகளை மூன்று மாதங்களில் முடிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்