Published on 03/08/2021 | Edited on 03/08/2021

தமிழ்நாட்டில் வரும் 7ஆம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்துவருகிறது. இந்நிலையில் வரும் 7ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் அநேக இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொருத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.