Skip to main content

தேனி அருகே பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறியா? ரத்த மாதிரி புனே அனுப்பிவைப்பு 

Published on 15/03/2020 | Edited on 15/03/2020

சீனாவில் ஏராளமான பேரை பலி கொண்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பரவத் தொடங்கியுள்ளது. ஐரோப்பிய நாடான இத்தாலியில் ஒரே நாளில் 250 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.இந்த கொரோனா வைரஸால் மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
 

அதுபோல் ஈரான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் வேகமாக பரவி வருவதை தடுக்க அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அதுபோல் இந்தியாவிலும் 80-க்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டதால் தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் மூலம் கொரோனா வைரஸ் பரவுகிறது. கேரளாவில் 19 பேர் பாதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர். தேனி மாவட்டத்தில் கேரள எல்லையை ஒட்டி உள்ளதால் கம்பம்மெட்டு, போடிமெட்டு, குமுளி ஆகிய பகுதிகளில் மருத்துவத் துறையினர், சுகாதாரத்துறையினர் முகாமிட்டு பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வாகனங்களில் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 

Can a woman near Theni show a coronavirus virus?

 

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியை சேர்ந்த ஈஸ்வரி (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) கடந்த சில தினங்களுக்கு முன்பு சமையல் வேலைக்காக கேரளா சென்று வந்தார். இந்த நிலையில் தற்போது அவருக்கு காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா? என பரிசோதனை செய்ய தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அந்த  பெண்ணை அனுப்பி வைத்தனர்.

அங்கு  ரத்த மாதிரி எடுத்து புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் முடிவு தெரிந்த பின்னர்தான் அந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதா என்று உறுதி செய்யப்படும்  என டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் அவரை தனி வார்டில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
 

இது சம்பந்தமாக கம்பம் மருத்துவ அதிகாரி பொன்னரசன் கூறுகையில், அந்தப் பெண்ணுக்கு காய்ச்சல், இருமல், தொற்றுநோய்கள் இருக்கிறது. அதனால் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. எனவேதான் மேல் சிகிச்சைக்காக தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அதைத்தொடர்ந்து கம்பம், கூடலூர், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் காய்ச்சல் இருமல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டும். மேலும் கொரோனா வைரஸ் குறித்து பீதி அடைய வேண்டாம் என்று கூறினார். இச்சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கனமழை எதிரொலி; பள்ளி விடுமுறை தொடர்பான அறிவிப்பு

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
 Heavy rain echoes; Notification regarding school holidays

அண்மையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முன்னதாக வெளியிடப்பட்டிருந்த சென்னை வானிலை மைய அறிவிப்பில், ‘இன்று முதல் ஏழு நாட்கள் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவடங்களின் ஒரு சில இடங்களில் இரண்டு நாட்களுக்குக் கனமழை இருக்கும். அடுத்த ஐந்து நாட்களுக்குத் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரவும் வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கனமழை எதிரொலி காரணமாக நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Next Story

என். ஐ.ஏ அதிரடி சோதனை; பென்டிரைவ், செல்போன்கள் பறிமுதல்

Published on 30/06/2024 | Edited on 30/06/2024
 N. AI Action Test; Confiscation of pen drives, cell phones

தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி உட்பட 12 இடங்களில் என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை, கும்பகோணம், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட 12 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 'ஹிஜ்புத் தகர்' என்ற தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுவோர் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக புதுக்கோட்டையில் மாத்தூரில் உள்ள அப்துல்கான் என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆள்சேர்ப்பு மற்றும் உதவி புரிதல் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் என்.ஐ.ஏ சோதனைக்கு பிறகு வெளிவரும் என தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தாம்பரம் அடுத்துள்ள முடிச்சூர் பகுதியில் உள்ள ஹமீத் அக்பர் அகமது என்பவர் வீட்டில் சோதனையில் நடைபெற்ற வருகிறது. அதேபோல ஈரோட்டில் நடைபெற்ற சோதனையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை பட்டினம்பாக்கம் பகுதியில் சோதனையில் ஈடுபட்ட பொழுது ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்த என்.ஐ.ஏ அதிகாரிகள் பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் அந்த நபரை ஒப்படைத்துவிட்டு கொளத்தூர் பகுதிக்கு விசாரணைக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோல் இந்த சோதனைகளில் பென்டிரைவ், செல்போன் உள்ளிட்ட ஆவணங்கள் பலரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.