Skip to main content

''ராஜராஜ சோழனை இந்துவாக மாற்றியதாக பேசுபவர்கள் அனாதைகள்''-எச்.ராஜா விமர்சனம்

Published on 05/10/2022 | Edited on 05/10/2022

 

bjp H. Raja Interview

 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழா  நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டு பேசினார். அதில் திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்துவது போல் ராஜ ராஜ சோழனுக்கு இந்து அடையாளம் கொடுக்கின்றனர் என விமர்சனம் செய்திருந்தார். இதையடுத்து வெற்றிமாறனுக்கு எதிராகவும், ஆதரவாகவும் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக பிரமுகர் எச்.ராஜாவிடம் செய்தியாளர்கள் இது குறித்த கேள்விகளை முன் வைத்தனர். அதற்கு பதிலளித்த எச்.ராஜா, ''யாரோ வெற்றிமாறனாம்... வெற்றி மாறனோ, தோல்வி மாறனோ தெரியவில்லை. ராஜராஜ சோழனை இந்துவாக மாத்த ஞானஸ்தானம் பண்ணிட்டோமா. எனக்கு அவ்வளவு சரித்திர அறிவில்லை. அவர் பெயரை வெற்றிமாறன் அப்படின்னு வைத்திருக்கிறார். அவரே ராஜராஜ சோழன் கட்டிய இரண்டு சர்ச், ரெண்டு மாஸ்க் எங்க இருக்கிறது என்று சொல்லிவிட்டால் போதும். ராஜராஜ சோழன் சிவனுடைய பக்தன். எந்த அளவுக்கு என்றால் தன்னை சிவபாத சேகரன் என்று அழைத்துக் கொண்ட மாமன்னன் ராஜராஜ சோழன். அவர் ஹிந்து இல்லையா'' என்றார்.

 

அப்பொழுது செய்தியாளர் ஒருவர் ''அவர் இந்து கிடையாது. அப்பொழுது சைவம் வைணவம் என்ற மதங்கள் தான் இருந்தது. அதனால் அவர் விரும்பிய சைவ கடவுளான சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற கருத்தை அவர்கள் தரப்பு முன் வைக்கிறார்கள்'' என்று கேள்வி எழுப்ப, வழக்கம்போல் ஆத்திரமடைந்த எச்.ராஜா, ''நீங்கள் தவறான ஆர்க்யூமென்டை என்னிடம் வைக்க கூடாது'' என்றார்.

 

அதற்கு செய்தியாளர், ''நான் வைக்கவில்லை. திருமாவளவன், ஜோதிமணி எம்பி ஆகியோர் வைக்கின்றனர்'' என்றார். அதற்கு எச்.ராஜா, ''தேச விரோதிகள், முட்டாள்கள் பேசுகிறார் என்றால் அதை நாம் பேசக்கூடாது. வேதம் வேற தமிழ் வேற இல்லை. வேதம் வேற சைவம் வேற இல்லை. அதனால் ராஜராஜ சோழன் இந்து தான். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படியும் இந்து தான். இந்து ஒரு அனாதி மதம். அதற்கு துவக்கமே கிடையாது. அனாதி என்றால் அனாதை அல்ல ராஜராஜ சோழனை இந்துவாக மாற்றியதாக பேசுபவர்கள்தான் அனாதைகள்'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.