Skip to main content

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சீறி பாய்ந்த ஆட்டோக்கள்!! நடவடிக்கை எடுத்த காவல்துறை! 

Published on 14/05/2022 | Edited on 14/05/2022

 

Auto Race in chennai Trichy high way

 

சென்னை புறநகர் பகுதியில் அவ்வப்போது ஆட்டோ மற்றும் பைக் ரேஸ் நடத்தும் கும்பல் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

 

இந்த நிலையில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சட்டவிரோதமாக நேற்று காலை ஆட்டோ ரேஸ் நடத்தப்பட்டுள்ளது. விழுப்புரம் அருகே உள்ள ஜானகி புறத்திலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையில் உள்ள மடப்பட்டு வரை சுமார் 20 கிலோமீட்டர் தூரம்வரை இந்த ஆட்டோ ரேஸ் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆட்டோ ரேஸ் பந்தயத்தில் சென்னை சிந்தாதிரிப்பேட்டை, வியாசர்பாடி உட்பட பல பகுதிகளைச் சேர்ந்த 4 ஆட்டோக்களும் விழுப்புரத்தை சேர்ந்த ஒரு ஆட்டோ என மொத்தம் 5 ஆட்டோக்கள் இந்த பந்தயத்தில் பங்கேற்றுள்ளன. 


இந்த ஆட்டோ ரேஸ் பந்தயம் குறித்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும், பந்தய ஆட்டோ ஓட்டுநர்களை இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் உற்சாகப்படுத்தி சென்றுள்ளனர். இந்த பந்தயத்தில் முதலிடம் பிடித்த சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநருக்கு 10 ஆயிரம் ரூபாய் பரிசும் வழங்கியுள்ளனர். 


ஆட்டோ ரேஸ் நடத்துவதற்கு அரசு ஏற்கனவே தடை விதித்துள்ள நிலையில், தடையை மீறி தமிழகத்தின் முக்கிய தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விழுப்புரம் பகுதியில் ஆட்டோ ரேஸ் பந்தயம் நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், விழுப்புரம் போலீசார் ஆட்டோ ரேஸ் நடத்தியவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி நேற்று ஒரு ஆட்டோவை பறிமுதல் செய்து உள்ளனர். மேலும், ரேஸில் பங்கேற்றவர்களையும், ஆட்டோக்களையும் விரைவில் பிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.