Published on 29/04/2019 | Edited on 29/04/2019
இன்று பல்வேறு வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்யவந்ததால், இன்னும் வேட்புமனுத்தாக்கல் செய்யமுடியாமல் நிறைய வேட்பாளர்கள் தவித்து வருகின்றனர்.
![aravakkurichi](http://image.nakkheeran.in/cdn/farfuture/o-absfByz2ZQazY5TiCo9dsnYRGjgNwI0RZWOxfYr4Y/1556540454/sites/default/files/inline-images/aravakkurichi.jpg)
4 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்றோடு நிறைவடைகிறது. இந்நிலையில் இன்று மட்டும் 42 வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்ய வந்துள்ளனர். வழக்கமாக 11 மணிமுதல் 3 மணிவரை மட்டுமே வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படும். ஆனால் தற்போதுவரை வேட்புமனு பரிசீலனை முடியவில்லை. 3 மணிக்குள் வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது, அவர்கள் காத்திருக்கின்றனர். திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி 24ம் தேதி மனுத்தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.