Skip to main content

“பெயர் புகைப்படம் மற்றும் குரலை பயன்படுத்தக்கூடாது”- ரஜினி சார்பில் வெளியான அறிவிப்பு

Published on 28/01/2023 | Edited on 28/01/2023

 

Action if using Rajinikanth's name photo and voice

 

நடிகர் ரஜினியின் பெயர், புகைப்படம் மற்றும் குரலை அனுமதியின்றி பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

 

சில நிறுவனங்கள் பிரபலமடைய நடிகர் ரஜினியின் பெயர், புகைப்படங்கள், குரலை அனுமதியின்றி பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், “ரஜினிகாந்த் பிரபலமாக இருப்பதால் ரஜினியின் புகைப்படம், குரல் உள்ளிட்ட அனைத்துக்குமான முழு உரிமையும் அவர் வசமே உள்ளது. எனவே குரல், புகைப்படம் மற்றும் பெயரை முன் அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது சிவில் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்” என நடிகர் ரஜினிகாந்த் சார்பில் அவரது வழக்கறிஞர் சுப்பையா இளம்பரிதி அறிக்கை வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

மேலும், “இந்த அறிவிப்பு என்பது சென்னை போயஸ் கார்டன் முகவரியில் வசித்துவரும் ரஜினிகாந்த் பெயரில் வெளியிடப்படுகிறது. இவரின் ஸ்டைலான நடிப்பினால் ரசிகர்கள் அவரை சூப்பர் ஸ்டார் என அழைத்து வருகின்றனர். திரையுலகம் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் அவருக்கான மரியாதை நிகரற்றதாக உள்ளது. ரஜினிகாந்த் செலிபிரிட்டி அந்தஸ்தில் இருக்கிறார். இந்நிலையில் பல உற்பத்தி நிறுவனங்கள் நடிகர் ரஜினிகாந்த்தின் குரல், போட்டோ, புகழ் உள்ளிட்டவற்றை அவர் அனுமதியின்றி பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.

 

இது பொதுமக்களுக்கும் ரசிகர்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே முன் அனுமதியின்றி வர்த்தக ரீதியாக அதைப் பயன்படுத்தும் நபர்களுக்கு எதிராக, வரும் நாட்களில் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜனநாயக கடமையாற்றினார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Actor Rajinikanth cast his vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

Next Story

“அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்!”- ரஜினிகாந்த்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Rajinikanth has said that he will not answer political questions

வேட்டையன் படப்பிடிப்பிற்காக சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவரும் திரைப்படமான வேட்டையன் படப்பிடிப்பு, ஹைதராபாத் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது.

அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள, சென்னையிலிருந்து விமானம் மூலம் கடந்த 9ஆம் தேதி ஹைதராபாத் புறப்பட்டார். 75 சதவீத படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

“படப்பிடிப்பு நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது..” என்று மீடியாக்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்தபோது, நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு  “அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்..” என்று கூலாகச் சொல்லிவிட்டு கிளம்பினார்.