Skip to main content

30 டூவிலர்கள் - 4 கார் திருடன்... சிக்கினான் திருச்சியில்!!

Published on 03/12/2019 | Edited on 03/12/2019

திருவெறும்பூர் மற்றும்  திருச்சி பகுதியில்  மூன்று மாதங்களில் 30 டூவீலர்கள் 4 கார் களை திருடிய பிரபல திருடனை திருவெறும்பூர் போலீசார் கைது செய்துள்ளதோடு அவனிடமிருந்து 2 கார் 30 டூவீலர்களை பறி முதல் செய்துள்ளனர்.

திருவெறும்பூர் குற்றச்செயல்களில் கூடாரமாகவும், சமூக விரோத செயல்களில் பிறப்பிடமாகவும் உள்ளது என்றால் மிகையாகாது.

இந்நிலையில் திருவெறும்பூர் வட்டார காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனம், கார் உள்ளிட்டவை கடந்த மூன்று மாதங்களாக திருட்டு போயிருந்தது. திருடர்களை பிடிக்க முடியாமல் திருவரம்பூர் வட்டார போலீசார் திணறி வந்தனர்.

 

  30 Two-wheelers - 4 car thieve arrest


அதன் அடிப்படையில் திருச்சி சரக டிஜஜி பாலகிருஷ்ணன், எஸ்பி ஜியா கு உல் ஹக் உத்தரவின் பேரில் திருவெறும்பூர் ஏஎஸ்பி பீரவீன் உமேஷ் டோங்ரே மேற்பார்வையில் திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் ஞானவேலன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் திருவெறும்பூர் அருகே உள்ள காந்தி நகர் 8-வது தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (60) இவர் இட்லி மாவு வியாபாரம் செய்து வருகிறார். இந்தநிலையில் இவர் கடந்த 20ம் தேதி திருவெறும்பூர் ரயில்நிலையத்தில் பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்கு தனது இருசக்கர வாகனத்தை ரயில்நிலையம் முன்பு நிறுத்திவிட்டு உள்ளே சென்று விட்டு திரும்பி வந்து பார்க்கும்போது இருசக்கர வாகனத்தை காணவில்லை.

 

  30 Two-wheelers - 4 car thieve arrest


இச்சம்பவம் குறித்து ஆறுமுகம் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதனடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவத்தை வைத்து தேடிவந்தனர்.

இந்த நிலையில் 01.12.2019 இரவு  திருவெறும்பூர் மலைக்கோயில் பகுதியில் திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் ஞானவேல் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகப்படும் படியாக பைக்கில் வந்த  தஞ்சை மாவட்டம் நடுபடுகை வீரசிங்கம்பேட்டை சேர்ந்த அகஸ்டின் என்பவரை வழிமறித்து பிடித்துள்ளனர். மேலும் அவருடன் விசாரணை செய்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார். அப்பொழுதுதான் ஆறுமுகத்தின் பைக்கை திருடிய வழக்கில் தேடப்படும் குற்றவாளி அகஸ்டின் என்பது திருவெறும்பூர் போலீசாருக்கு தெரிய வந்தது.

அதனடிப்படையில் அகஸ்டினை திருவெறும்பூர் போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். பின்னர் திருவெரும்பூர் போலீசார் அகஸ்டினிடம்  முறையான விசாரணை  நடத்தியபோது பலதிடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
 
கடந்த 2009-ம் ஆண்டு அகஸ்டின் தஞ்சை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகள் 10 பைக்குகளை திருடிய வழக்கில் தஞ்சை கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்ததாகவும்,  தண்டனை முடிந்து வெளியில் வந்த அகஸ்டின் மயிலாடுதுறை பகுதியில் இரு சக்கர வாகனங்களை திருடியதாகவும் அப்போது  மயிலாடுதுறை போலீசார் அவரை கைது செய்து குண்டர் சட்டத்தில் கைது சிறையில் அடைத்ததாகவும்.

 

  30 Two-wheelers - 4 car thieve arrest


தண்டனை முடிந்து வெளிய வந்த அகஸ்டின் மன்னார்குடி பகுதியில் தனது இரண்டாவது மகளின் கணவன் கேன்டில் ராஜாவோடு சேர்ந்து  15 பைக்குகளை திருடி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும். அதன்பின் அகஸ்டின் புதுக்கோட்டை பகுதியில் இரண்டு சக்கர வாகனங்கள் திருடியதாகவும் அதில் கைது செய்யப்பட்டு அகஸ்டின் சிறையில் இருந்தப்போது தன்னுடன் சிறையில் இருந் அவனின் மனைவியோடு தொடர்பு ஏற்பட்டதாகவும்.

இந்த நிலையில்  கடந்த 4 மாதத்திற்கு முன்பு  புதுக்கோட்டை சிறையில் இருந்து  வெளியில் வந்த அகஸ்டின்  அந்தப் பெண்ணுடன் கரூரில் சேர்ந்து வாழ்ந்து வந்ததாகவும் அதன்பிறகு கடந்த 3  மாதங்களாக திருச்சி  மாவட்டத்திற்குட்பட்ட திருவெறும்பூர் பெல் தொழிற்சாலை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 2 கார்கள், 3 டூவீலர்கள், திருவெறும்பூர் பகுதியில் 4 டூவீலர், துவாக்குடி மணிகண்டம் தலா ஒரு டூவீலர்கள், லால்குடி பகுதியில் இரண்டு, கரூர் பகுதியில் 4, காங்கேயம், கும்பகோணம், செங்கிப்பட்டி, பகுதிகளில் 3 டூவீலர்களும், திருச்சி ஜங்சன் பகுதியில் 10 டூ வீலர் மற்றும் 2 கார்களையும் திருடியதை ஒப்புக் கொண்டான்.

மேலும் அவரிடம் விசாரணை செய்தபோது அகஸ்டின் பேருந்து நிறுத்தம் பொதுமக்கள் கூடும் இடம் ஆகிய இடங்களில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களை திருடுவதாகவும் அப்படி திருடும் போது இருசக்கர வாகனங்களில் பூட்டை உடைப்பது கிடையாது என்றும்  பத்துக்கும் மேற்பட்ட சாவிகளை கையில்  வைத்திருப்பதாகவும் அந்த சாவியை போட்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை திருடியதாகவும் அப்படி திருடிய இருசக்கர வாகனங்களை தஞ்சை கீழவாசல் பழைய இரும்பு கடை வியாபாரி கனகராஜ், பூதலூர் சேர்ந்த அப்பு (எ) பத்மநாபன் ஆகியோரிடம் விற்பனை செய்ததும்,

 

  30 Two-wheelers - 4 car thieve arrest




கார்களை கரூர் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியை சேர்ந்த ராமசாமியிடம் விற்றதாகவும் டூ வீலர்களை 3 ஆயிரம் முதல் 5 ஆயிரத்திற்கும், கார்களை 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை விற்றதாக கூறியுள்ளான்.

மேலும் ஒரு பகுதியில் திருடி போலீசாரிடம் பிடிபட்ட பிறகு அந்த பகுதியில் மீண்டும் திருடுவதற்கு செல்லவில்லை என்று சொல்வதில்லை என்றும் மேலும் ஒருவரிடமே திருடும் பொருட்களை விற்பது இல்லை என்றும் பலரிடம் இருப்பதாகவும் அகஸ்டின் கூறியுள்ளான்

அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிந்து அவனிடமிருந்து 30 இருசக்கர வாகனங்கள்  2 கார்கள் பறிமுதல் செய்துள்ளனர். திருச்சி ஜங்சன் பகுதியில் திருடப்பட்ட 2 கார்களை பழைய இரும்பு வியாபாரி  உடைத்து விட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது. அதன் அடிப்படையில் அகஸ்டினை திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் திருவெறும்பூர் போலீசார் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார். 

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.